மேலும் அறிய

வீட்டுக்குள் சிதறி கிடந்த உடல் பாகங்கள்.. அமைதியாய் தூங்கிய சைக்கோ பெண் - பாகிஸ்தானில் பயங்கரம்

கராச்சியில் முதியவரை கொலை செய்து அவரை உடலை துண்டு, துண்டாக வெட்டி, அதே பிணத்துடன் பெண் ஒருவர் தூங்கிய சம்பவம் பாகிஸ்தானையே அதிர வைத்துள்ளது.

 பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று கராச்சி. கராச்சியில் நடைபெற்ற கொடூர கொலை ஒன்று அந்த நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கராச்சி நகரத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உயிரிழந்த நிலையில் ஒருவரது கை மட்டும் தெரிவதாக அந்த நகர போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு சென்ற போலீசார் கண்ட காட்சி அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடை வைத்தது. தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், அந்த அடுக்குமாடி குடியிருப்பை திறந்துள்ளனர். காவல்துறையினர் அறையை திறந்தவுடன் அந்த அறை முழுவதும் தலை மற்றும் கை தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் ஒன்று கிடந்துள்ளது. அந்த அறையில் மனித உடலின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி, அறை முழுவதும் பரவிக்கிடந்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகள் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்துள்ளது. அந்த அறை முழுவதையும் கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.


வீட்டுக்குள் சிதறி கிடந்த உடல் பாகங்கள்.. அமைதியாய் தூங்கிய சைக்கோ பெண் - பாகிஸ்தானில் பயங்கரம்

மற்றொரு அறையில் பெண் ஒருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். போதையில் இருந்த அந்த பெண் உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், உடலை வெட்டுவதற்கான ஆயுதங்களும் அவர் அருகில் கிடந்தது. அவர் படுக்கையின் அருகில் உயிரிழந்தவரின் கைகளும் இருந்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த பெண்ணை எழுப்பி கைது செய்தனர். அவரிடம் உயிரிழந்தவர் அந்த பெண்ணின் கணவரா? என்று போலீசார் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் உயிரிழந்தவர் தனது கணவர்தான் என்றும், 60 வயதான அவரது பெயர் முகமது சோஹைல் என்றும் கூறினார், ஆனால், சிறிது நேரத்தில் அவர் தனது கணவர் இல்லை என்றும், அவர் தனது மைத்துனர் என்றும் கூறினார். இதனால், காவல்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேலும், 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மதுபோதையில் இருந்ததாலும் போலீசார் விசாரணைக்கு அந்த பெண்ணால் முழுவதும் ஒத்துழைக்க முடியவில்லை.


வீட்டுக்குள் சிதறி கிடந்த உடல் பாகங்கள்.. அமைதியாய் தூங்கிய சைக்கோ பெண் - பாகிஸ்தானில் பயங்கரம்

அதே நேரத்தில், அந்த பெண் போலீசார் நடத்தும் விசாரணையில் மிகவும் அமைதியாகவே இருப்பது தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கராச்சி நகரின் காவல்துறை அதிகாரி ஜூபைர் ஷேக் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபர் கராச்சி நகருக்கு அருகில் உள்ள சதார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு அங்கு குடும்பம் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபரும், கைது செய்யப்பட்ட பெண்ணும் லிவ் இங் டு கெதர் முறைப்படி பல நாட்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும், பணத்திற்காக இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் வாக்குமூலம் மூலமாக கண்டறிந்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget