மேலும் அறிய

ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் பெண் குழந்தைகள்.. 9 வயதில் திருமணம்.. ஈராக் கொண்டு வந்த சர்ச்சை சட்டம்!

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சட்டத்தின்படி, 15 வயதுடைய ஆண் குழந்தைகளும் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஈராக்கில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக, ஹிஜாப்பை முறையாக அணியாதவர்கள் மீது அபராதமும் கடும் தண்டனையும் வழங்கப்படுகின்றன.

ஈராக்கில் சர்ச்சை சட்டம்: திருமணம் செய்வதற்கு தந்தையின் ஒப்புதல் கட்டாயம். வெளிநாடு செல்லவும் வேலைக்கு சேரவும் கணவரின் அனுமதி தேவை. இப்படி பல கட்டுப்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிலையில், பெண்களின் திருமண வயதை குறைக்க ஈராக் அரசு திட்டமிட்டு வருகிறது.

ஈராக்கில் 18ஆக இருந்த பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம், 9 வயது பெண் குழந்தைகளுக்கு கூட திருமணம் செய்து வைக்கலாம். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  

ஈராக்கில் உள்ள தனிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சர்ச்சைக்குரிய சட்டத்தை நிதித்துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளது. குடும்ப விவகாரங்களில் தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தை ஒன்று மதகுருமார்கள் எடுக்கலாம் அல்லது நீதித்துறை எடுக்கலாம். இருவரில் ஒருவரை குடிமக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஒடுக்கமுறைக்கு உள்ளாகும் சிறுமிகள்: இந்த சட்டத்தின் மூலம் சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை வளர்ப்பு ஆகிய விவகாரங்களில் பெண்களுக்கு இருக்கும் மிச்சமுள்ள உரிமைகளும் பறிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 15 வயதுடைய ஆண் குழந்தைகளும் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும். இது குழந்தைத் திருமணம் மற்றும் சுரண்டல் அதிகரிக்க வழிவகுக்கும் என்ற மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுமிகளின் கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் இந்த சட்ட திருத்தம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணத்தால் பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் அதிகரிக்கும் என்றும் முன்கூட்டிய கர்ப்பமாவது அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

குடும்ப வன்முறைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான UNICEF இன் கூற்றுப்படி, ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (HRW) ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறுகையில், "இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாடு முன்னோக்கி செல்லவில்லை, பின்னோக்கி நகர்வதைக் காட்டுகிறது" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget