Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்
Trump Iran War: அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை நிராகரித்த ஈரான், 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தற்போதைய போரை முடித்துக் கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளது.

Trump Iran War: அதிபர் ட்ரம்ப் வெறுமென மிரட்டவில்லை, அவர் பெரும் தாக்குதலுக்கு தயாராக உள்ளார் என அமெரிக்கா தரப்பில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ட்ரம்ப் சொல்வதை கேட்க முடியாது”
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றங்களை தணிக்க வேண்டுமானால், அமெரிக்க 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு, ட்ரம்ப் முன்மொழிந்த பரிந்துரைகளையும் ஈரான் நிராகரித்துள்ளது. மேலும், தங்களது விருப்பப்படியே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது. மோதலை முடிவுக்கு கொண்டு வர சில நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் சூழலில், அவற்றின் வாயிலாக தங்களது நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தெரியப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் முன்மொழிந்துள்ள திட்டங்கள் அமைதிக்கானதாக இல்லாமல், எங்கள் மீதான கூடுதல் அழுத்தத்திற்கே வழிவகுக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் முன்பாக பாதுகாப்பு, இழப்பீடுகள் மற்றும் பிராந்திய உறுதிமொழிகள் தொடர்பான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் போட்ட 5 கன்டிஷன்கள் என்ன?
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொள்ளப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். அதன்படி,
- ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்
- ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படாது என்பதற்கு உறுதியான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்
- போர் சேதங்கள் மற்றும் இழப்பீடுகளை தெளிவாகவும் சட்டப்பூர்வமாகவும் வரையறுக்க வேண்டும்
- பிராந்தியத்தில் ஈரானுடன் இணைந்த எதிர்ப்பு குழுக்கள் சம்பந்தப்பட்டவை உட்பட அனைத்து வகையான பகைமைகளுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்
- ஹார்மஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிப்பது, தங்களது இயற்கையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமை. அந்த கடைமையை அமெரிக்கா செய்ய வேண்டும்
என ஈரான் தங்களது நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள பதற்றத்தை தடுக்கும் வகையிலான ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அமெரிக்கா எச்சரிக்கை..
இதனிடையே, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால், அதன் மீது கடும் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருப்பதாக, அந்நாட்டின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ட்ரம்ப் வெறுமனே மிரட்டல் விடுப்பவர் அல்ல. தற்போதைய சூழ்நிலையை ஈரான் தவறாகக் கணிக்கக் கூடாது. தற்போதைய தருணத்தின் யதார்த்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளத் தவறினால், தாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்பதையும், தொடர்ந்து தோற்கடிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளத் தவறினால், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதை அதிபர் ட்ரம்ப் உறுதி செய்வார்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதேநேரம், ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் தரப்பிலிருந்து எந்தவித கருத்தையும் வெளியிட மறுத்துவிட்டார். பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையானது, இன்னும் முழுமையான வடிவம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமுனையில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தமும் தங்களை கட்டுப்படுத்தாது என இஸ்ரேல் பேசி வருகிறது.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்























