மேலும் அறிய

Haiti | இன்னலில் ஹைதி : அதிபர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் - இடைக்கால அதிபர் தகவல்

நிலநடுக்கம், சூறாவளி, அரசியல் நிலையின்மை இந்த மூன்றும் மாறிமாறி ஹைதி மக்களை வதைக்கிறது. கடைசியாக நடந்துள்ள பெருந்துன்பம் என பட்டியலில் இணைந்துள்ளது அதிபர் ஜொவினல் மொய்சேவின் படுகொலை.

வட அமெரிக்க கண்டத்தில் கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு குட்டி தீவு நாடு தான் ஹைதி. மக்கள் தொகை வெறும் 1.3 கோடி. சொல்லப்போனால் நம் நாட்டின் பெருநகரான மும்பையைவிட அளவில் பாதியுடைய சிறு நாடு. நாடு சிறிது ஆனால் பிரச்சனைகளோ பெரிது. ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளின் காலனி ஆதிக்கத்திலிருந்த விடுபட்ட ஹைதியை இயற்கை கருணை காட்டாமல் அடிக்கடி புரட்டியது. நிலநடுக்கம், சூறாவளி, அரசியல் நிலையின்மை இந்த மூன்றும் மாறிமாறி ஹைதி மக்களை வதைக்கிறது. கடைசியாக நடந்துள்ள பெருந்துன்பம் என பட்டியலில் இணைந்துள்ளது அதிபர் ஜொவினல் மொய்சேவின் படுகொலை.

போராட்டமும் கொந்தளிப்பும் கொலையும்..

அதிபர் ஜொவினல் மொய்சே மீது ஆரம்ப நாள் முதலே ஊழல் புகார்கள் எழுந்துவந்தன. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமானதாகவே மாறியிருந்தது. இந்நிலையில்தான், அதிபர் மொய்சே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை அறிவித்தார். இது மக்களை கடும் அதிருப்தியில் தள்ளியது. வெகுண்டெழுந்த மக்கள் தலைநகர் போர்ட் ஆவ் பிரன்ஸில் திரண்டனர். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்தப் போராட்டம் தான் மொய்சே அரசுக்கு மிகக்கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அதிபரின் கொலை நடந்துள்ளது.

அதிபர் மொய்சேவையும் அவரது மனைவியையும் மர்ம நபர்கள் சிறைப்பிடித்தனர். மொய்சேவை கொலை செய்வதற்கு முன்னர் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அவரைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரின் மனைவியைக் கடுமையாக தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். கூலிப்படையால் ஒரு நாட்டின் அதிபரையே சுட்டுக்கொல்ல முடிந்துள்ள இந்த சம்பவம் உலகின் சிறு நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


Haiti | இன்னலில் ஹைதி : அதிபர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் - இடைக்கால அதிபர் தகவல்

ஹைதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், பதற்றத்தைக் குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களைப் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்புமாறு ஹைதி அரசு கேட்டுள்ளது. 

ஹைதியில் பொருளாதாரப் பின்னடைவு ஏன்?

ஹைதியில் கடந்த 10 ஆண்டுகளாகவே மாறி மாறி இயற்கை சீற்றங்கள் கோரத்தாண்டவம் ஆடியது. 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமும், 2015ல் ஏற்பட்ட சூறாவளியும் ஹைதியை நிலைகுலையச் செய்தது. கடும் சூறாவளியும், நிலநடுக்கங்களும் ஹைதியை பாதித்திருந்த வேளையில் 2017ல் அதிபராக பொறுப்பேற்றார் மொய்சே (53). ஆனால், மக்கள் நலன் காப்பதைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு சர்வாதிகாரியைப் போலவே அவர் நடந்துகொண்டார். அவருக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாகிவிட்டன. போராட்டங்களை கிளர்ச்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து அங்கு வன்முறைக்குப் பஞ்சமில்லாமல் போனது.

2019-ஆம் ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும் ஆனால் அதனை நடத்தாமல் தவிர்த்தார் மொய்சே. 'நான் தாமதமாக பதவியேற்றுக்கொண்டதால், இன்னும் ஓராண்டுகள் என் பதவி தொடரும்' என்று அறிவித்து ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கினார். தனியார் விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்த அதிபரை கூலிப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவரது உடலில் 12 இடங்களில் குண்டுகள் துளைத்துள்ளன. துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னரும் அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று இடைக்காலப் பிரதமர் கூறியுள்ளார்.

ஹைதியின் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் பதவியேற்றுள்ளார். அவரும் தன்னைத்தானே இடைக்காலப் பிரதமராக அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget