உலகளவில் கொரோனாவுக்கு 14.19 கோடி பேர் பாதிப்பு
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 32 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 19 லட்சத்து 87 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 32 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரத்து 109 ஆக உள்ளது . ஒரு கோடியே 84 லட்சத்து 38 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 43 ஆயிரத்து174 பேருக்கு ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 310 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















