மேலும் அறிய

Eiffel Tower: ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்..வெளியேற்றப்பட்ட மக்கள்..உச்சக்கட்ட பரபரப்பு

உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் உள்ள புகழ்மிக்க ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஈபெல் டவரின் மூன்று தளங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவர், மத்திய பாரிசில் அமைந்துள்ளது.

ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்:

கடந்தாண்டு மட்டும், இங்கு 62 லட்சம் மக்கள் வந்து சென்றுள்ளனர். ஈபெல் டவரை பராமரித்து வரும் என்.இ.டி.இ அமைப்பு, வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறிப்பிடுகையில், "வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் குழு மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, ஈபெல் டவர் மாடியில் அமைந்துள்ள உணவகம் உட்பட அனைத்து தளங்களையும் சோதனை செய்தனர்.

இந்த வகையான சூழ்நிலையில் இது ஒரு வழக்கமான செயல்முறை. இருப்பினும், இம்மாதிரியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அரிதான ஒன்று" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈபெல் டவரின் தெற்கு தூணில் ஒரு காவல் நிலையம் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக கேமரா மூலம் ஈபெல் டவர் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல, அங்கு நுழைவதற்கு முன்பு பார்வையாளர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

ஈபில் டவர் பற்றிய சுவாரசிய தகவல்கள்:

  • ஈபெல் டவரின் கட்டுமானப் பணிகள், கடந்த 1887ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கி 1889 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்தது. இது, அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப்புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.
  • கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி ( 324 மீட்டர்) நிலப்பரப்பு 2. 5 ஏக்கர் ( 412 சதுர அடி , 100 சதுர மீட்டர்) .
  • கோபுரம் முழுவதும் 18, 038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த துண்டங்கள் அனைத்தும் 2 . 5 மில்லியன் போல்ட்கள் ( bolts ) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10, 100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7, 300 டன்களாகவும் உள்ளது.
  • இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள்
    எதுவும் பயன்படுத்தப் படவில்லை .
  • வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.
  • இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1, 665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி ( Elevator ) வசதியும் உள்ளது. இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி , சுற்றுலா வெளி, தகவல் நிலையம் என்பவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957 -லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget