மேலும் அறிய

கோட்டபயவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு...விடாது துரத்தும் போர் குற்றம்...சிங்கப்பூரில் கைதா?

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபயவை போர் குற்றத்திற்காக கைது செய்யக் கோரி சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு புகார் அளித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபயவை போர் குற்றத்திற்காக கைது செய்யக் கோரி சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு புகார் அளித்துள்ளது. 

International Truth and Justice Project என்ற மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்கள், 63 பக்கத்திற்கு புகார் அளித்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு போரின்போது, இலங்கையின் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி வகித்த கோட்டபய ஜெனீவா உடன்படிக்கையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் படி சிங்கப்பூரில் அவருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, சர்வதேச மனித உரிமை சட்டத்தையும் சர்வதேச குற்றச் சட்டத்தையும் அவர் மீறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து International Truth and Justice Project வெளியிட்ட அறிக்கையில், "கொலை, துன்புறுத்தல், மக்களை மனிதாபிமானமற்று நடத்துதல், பாலியல் வன்கொடுமை உள்பட பாலியல் வன்முறை செயல்கள், சுதந்திரத்தை பறித்தல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என கோட்டபய மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து International Truth and Justice Project அமைப்பின் நிர்வாக இயக்குநர் யாஸ்மின் சூகா கூறுகையில், "பொருளாதார சரிவின் காரணமாக இலங்கை அரசு நிலைகுலைந்தது. உண்மையில், 30 அல்லது அதற்கு மேலும் பல ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் தீவிர சர்வதேச குற்றங்களிலிருந்து அமைப்பு ரீதியான தண்டனை பெறுவதிலிருந்து அந்நாட்டு அரசு தப்பித்து வருவதே பொருளாதார சரிவுக்கு காரணம். ஊழல் மற்றும் பொருளாதாரத்தை தவறாக நிர்வாகம் செய்ததற்கு மட்டும் இன்றி பெரும் வன்குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

கோட்டபயவை கைது செய்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1989ஆம் ஆண்டு, கோட்டபய, ராணுவ தளபதியாக பதவி வகித்த போது, அவரின் பொறுப்பின் கீழ் இருந்த மாவட்டத்தில் 700 பேர் மாயமாகினர். 2009 போரில் கோட்டபயவின் பங்கு குறித்து புகாரில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், ராணுவ தளபதிகளுக்கு தொலைபேசி மூலம் கோட்டபய ராஜபக்ச குற்றங்களை செய்ய உத்தரவிட்டதற்கான ஆதாரங்கள் புகாரில் இணைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தலைமையகத்தில் இருந்து கொண்டு போரை ட்ரோன் மூலம் கிடைத்த  வீடியோக்களின் மூலம் ராஜபக்ச பார்த்ததற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கூடாரங்களில் உணவுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும், மருத்துவ சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதும் குழிக்குள் மக்கள் பதுங்கியிருப்பதை தெரிந்தே ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget