மேலும் அறிய

கொரோனாவால் வறுமையில் தள்ளப்பட்டவர்கள் இத்தனை கோடி பேரா? உலக வங்கியின் அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனாவால் உலகளவில் 15 கோடி பேர் ஏழைகளாயினர் என உலக வங்கி ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உலகளவில் 15 கோடி பேர் ஏழைகளாயினர் என உலக வங்கி ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 10ல் 8 பேர் வறுமை நிலைக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா நோயாளி அதாவது பேசன்ட் ஜீரோ கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவி இப்போது எங்கும் நிறைந்திருக்கிறது கொரோனா. 
கொரோனாவால் வேலையிழப்பு, சிறு குறு நடுத்திர தொழில்கள் முடக்கம் எனப் பல விஷயங்கள் நடந்துவிட்டன. உலகப் பணக்கார நாடுகள் கூட நிதிச்சுழலில் சிக்காமல் இல்லை. அப்படியென்றால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் நிலையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 24ல், முதல் முழு ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். அந்த ஊரடங்கு ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்பு சாரா தொழில்களின் பங்களிப்பது மிகப்பெரியது. 
ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலும் மிகப் பெரியளவில் முடங்கியது. ஊரடங்கால் வேலையிழந்து, தொழில் முடங்கி பலரும் தங்கள் நிலையில் இருந்து கீழே இறங்கினர். நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகவும், ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும் ஆயினர்.

இது பற்றி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 10 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 7.1 கோடி பேர் என உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை 4.8 கோடியில் இருந்து 5.9 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-2022ல் 8.3% ஆக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலையை அகற்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கெனவே உள்நாட்டுப் பூசல்கள், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்கள் இன்னும் மோசமான வறுமை நிலைக்குச் செல்வார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உடனடி தலையீட்டால் நிலையை சீரமைக்காவிட்டால் 2030க்குள் வறுமையை ஒழிப்போம் என்ற இலக்கை எட்ட முடியாது. மேலும் அதற்குள் உலக வறுமை விகிதமும் 7% ஆக அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, வறுமை நிலையை 20 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிக மோசமான வறுமை நிலை என்பதை உலக வங்கி வரையறுத்துள்ளது. அதாவது ஒரு மனிதரின் அன்றாட சராசரி வருமானம் 1.90 டாலர் என்றிருந்தால் அந்த நபர் மோசமான வறுமை நிலையில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget