மேலும் அறிய

படகு என்ஜினால் வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெலிகாப்டர்..! அசத்திய நபர் - ஷாக் கொடுத்த போலீசார்!

சென் தமது ஹெலிகாப்டரை பொழுதுபோக்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ உருவாக்கவில்லை என்றும், அதை விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறுகிறார்.

வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றை சோதனை செய்வதற்கு முற்பட்ட சீனாவை சேர்ந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு நபர், படகு இன்ஜினை கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரை சோதனை செய்ய முயன்றுள்ளார். பொறியியல் நிபுணத்துவமோ அல்லது பைலட் உரிமமோ ஏதும் இன்றி, விமானத்தை உருவாக்கியதாக 59 வயதாகும் சென் ருய்ஹுவா என்பவர் சாலையோரத்தில் பிடிப்பட்டுள்ளார். அவரது விமானத்தை சோதனை செய்வதிலிருந்து நிறுத்தப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். "நான் உட்பட இரண்டு பேர் மட்டுமே பறக்கவிடும் சோதனையில் ஈடுபட்டிருந்தோம், பார்வையாளர்கள் யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை," என்று போலீஸ் விசாரித்தபோது சென் கூறியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர்களை பொழுதுபோக்காகத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார். பின்னர் புதுமையான முயற்சிகள் செய்ய உந்துதல் ஏற்பட்டு அதனை பறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி உள்ளார். அவரது முந்தைய ஹெலிகாப்டர் மாடல்கள் பறக்காமல் சொதப்பிய நிலையில், சமீபத்தில் அவர் கண்டுபிடித்த ஹெலிகாப்டர் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் வரை பறக்கக்கூடியது என்று அவர் கூறினார்.

படகு என்ஜினால் வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெலிகாப்டர்..! அசத்திய நபர் - ஷாக் கொடுத்த போலீசார்!

ஹெலிகாப்டரை எவ்வாறு உருவாக்குவது என்பதை இணையத்தில் காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார். "நான் இந்த ஹெலிகாப்டரை தயாரிக்க சுமார் ஒரு வருடம் வேலை செய்துள்ளேன்; இதுவரை, பொழுதுபோக்கிற்காக சுமார் 2,00,000 யுவான்கள் (US$31,250) செலவழித்துள்ளேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தான் கடைசியாக செய்த ஹெலிகாப்டர் மாடலில் ஆன்லைனில் வாங்கிய சில பாகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சில ஹார்டுவேர் ஸ்டோர்களில் வாங்கியதாகவும் கூறிய அவர், அதற்காக பயன்படுத்திய மோட்டார், படகு இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். சென் தமது ஹெலிகாப்டரை பொழுதுபோக்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ உருவாக்கவில்லை என்றும், அதை விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறுகிறார். "உதாரணமாக, இது ஒரு ட்ரோனாக மாற்றப்பட்டு, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க விவசாய இயந்திரமாக பயன்படுத்தப்படலாம் அல்லது தீயை அணைப்பதற்கு உதவலாம்" என்று சென் கூறினார். இருப்பினும், ஹெலிகாப்டரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​காவல்துறையின் தலையீட்டால், அவரால் முழுவதுமாக சோதனை செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

படகு என்ஜினால் வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெலிகாப்டர்..! அசத்திய நபர் - ஷாக் கொடுத்த போலீசார்!

"அவர் ஹெலிகாப்டருடன் அங்கு நிற்பதைப் பார்த்து, அவர் என்ன செய்கிறார் என்று அவரிடம் கேட்டோம், நாங்கள் அவரிடம் சென்று கேட்பதற்கு முன்பே அவர் விமானத்தை சோதனை செய்து கொண்டிருந்தார் என்பது தெரிந்தது", என்று வாங் என்ற காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீனாவின் பிரதான நிலப்பரப்பில் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் தடைசெய்யப்பட்ட விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், விமான ஆணையத்தின் அனுமதியின்றி அவற்றை பறக்கவிட முடியாது. அதுமட்டுமின்றி அதனை பரக்கவிடும் நபர்களில் ஒருவருக்கு பைலட் உரிமமும் தேவை. "பாதுகாப்பு அபாயம்" எனக் கருதி, விமானத்தை மீண்டும் பறக்கவிட வேண்டாம் என்று சென்னுக்கு காவல்துறை அறிவுறுத்தியது. அதன்பிறகு, அவர்கள் பலமுறை அவரது வீட்டிற்குச் சென்று கண்காணித்து வந்துள்ளனர். அவர் மீண்டும் அந்த ஹெலிகாப்டரை சோதிக்க முயற்சிப்பார் என்று பயந்துள்ளனர். நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு, சென் பைலட் உரிமம் பெறும் வரை, ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வாங்கும்வரை தனது ஹெலிகாப்டரை பறக்க விட மாட்டேன் என்று உறுதியளித்தார்.

தலைப்பு செய்திகள்

US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget