மேலும் அறிய

Children Smartphone: ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு..இனி, 40 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்..சீனா அதிரடி

இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் மோகம் அதிகரித்ததால் சீனா அரசு, இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

நவீன உலகில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இன்றி எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்தியாவில் 60 கோடி பேரும் சீனாவின் 100 கோடிக்கும் மேற்பட்டோரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருவதாக தரவுகள் கூறுகிறது.

ஸ்மார்ட்போனால் ஏற்படும் உளவியல் சிக்கல்:

தொழில்நுட்பத்தால் எந்தளவுக்கு நன்மைகள் கிடைக்கிறதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டாகின்றது. அதேபோலதான், ஸ்மார்ட்போனாலும் பல தீமைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது, குழந்தைகள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம். உளவியல் ரீதியாக பல சிக்கல்களை விளைவிக்கிறது.

எனவே, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என உளவியல் நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, பெற்றோர்கள், இந்த விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா:

இந்த நிலையில், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள், ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதவாறு கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இம்மாதிரியான கட்டுபாட்டை அமல்படுத்த மொபைல் நிறுவனங்கள் அனைத்தும், 'மைனர் மோட்' என்ற வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வரைவு, பொது மக்களின் கருத்து கேட்புக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு, செப்டம்பர் 2ஆம் தேதி வரையில், கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் எதிர்பார்த்தபடியே ஏற்று கொள்ளப்பட்டால், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் முதல் நாடு என்ற பெயரை சீனா  பெறும்.

ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்:

சீன அரசு முன்மொழிந்துள்ள வழிகாட்டுதல்கள் ஐந்து வெவ்வேறு வயதினருக்கான கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கின்றன. அதன்படி, 3 வயதுக்கு குறைவான குழந்தைகள், 3லிருந்து 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 8லிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 12லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறார்கள், 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் என ஐந்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், 3 லிருந்து 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகளுக்கான பாடல்களயும் கல்வி மற்றும் பெற்றோர்-குழந்தை தொடர்பான நிகழ்ச்சியை காணொளியாக கேட்க மட்டுமே பரிந்துரைக்கபட்டுள்ளனர்.

16லிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், 'மைனர் மோட்'இன் கீழ் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். அதேபோல, இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழிகாட்டுதல்கள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் மோகம் அதிகரித்ததால் சீனா அரசு, இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget