மேலும் அறிய

99 வயது மூதாட்டிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை: ரகசிய கேமராவால் சிக்கிய பராமரிப்பாளர்..!

மூதாட்டி டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பிளாக்பூல் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்தார்.

இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் அவரது பராமரிப்பாளாராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் பாதிக்கப்பட்டது குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பராமரிப்பாளர் பிலிப் கேரி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். முதாட்டியின் நடத்தை மாறியதை குடும்பத்தினர் கவனித்தனர். இதையடுத்து ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட அவரது அறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டது. இந்தக் கேமிராவில் பிலிப் கேரி சிக்கியுள்ளார்.

அந்த மூதாட்டி டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பிளாக்பூல் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே அவரது உறவினர்கள் அவரை பார்க்க வந்தபோது அவரது நடத்தையில் வித்தியாசம் தெரிந்துள்ளது. அவர்களை என்னைத் தொடவிடாதீர்கள். என்னை காயப்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். 

இதை அடுத்து கேமிராவை அவரது அறையில் ரகசியமாக வைத்து கண்காணித்துள்ளனர் உறவினர்கள். அதில் பராமரிப்பாளரான 48 வயது கேரி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து காவல்துறை அவரைக் கைது செய்தது. அவர் முன்பு தடயவியல் ஆதாரங்கள் மற்றும் கேமிரா ஆதாரங்கள் வைக்கப்பட்டதை அடுத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்பளிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையில் இருப்பார். 

பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் வயதான உறவினர், நாங்கள் நம்பிய பராமரிப்பாளராலேயே சித்திரவதை செய்யப்பட்டு கவனித்துக் கொள்வதில் பயங்கரமான பல சோதனைகளைச் சந்தித்துள்ளார். அவருடைய நடத்தை மாறியதை நாங்கள் கவனித்தோம், அவர் எங்களிடமிருந்து பின்வாங்கினார், எங்களை கட்டிப்பிடிக்கத் தயங்கினார். முத்தமிடமாட்டார், நாங்கள் போகும் போது நாங்கள் செல்வதை அவர் விரும்பவில்லை. மேலும் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர் எங்களை கவலையடையச் செய்யும் விஷயங்களைச் சொன்னாள்.இதையடுத்து யாரோ அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிய வந்தது. அதன்பிறகுதான் கேமரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் பராமரிப்பாளரே இதைச் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கு இது மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது” என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காவல்துறை “கேரி மிகவும் இழிவான முறையில் தனது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் மீதான நம்பிக்கை இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர்..

அவரது குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து தரப்பட்ட தண்டனையை நாங்கள் வரவேற்கிறோம் மேலும் விசாரணைக் காலம் முழுவதும்  மற்றும் நீதிமன்ற வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட காலத்திலும் கண்ணியத்தோடும் வலிமையோடும் பொறுப்புணர்வோடும் நடந்துகொண்ட அவரது குடும்பத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.” எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget