மேலும் அறிய

இலங்கைக்கு வரும் அதிநவீன சீன கப்பல்...இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? முழு விவரம்..

சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல் ஒன்று, இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரவுள்ளது.

சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல் ஒன்று, இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரவுள்ளது. இது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இச்சூழலில், நிலைமை கண்காணித்து வருவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில், இந்த விவகாரம் பற்றிய முக்கியமான தகவல்களை கீழே காண்போம்

  • சீன கப்பல் இலங்கைக்கு வரவிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் படைத்தலைவர் நளின் ஹேரத், "இந்த கப்பல் ராணுவத்தை கண்காணிக்கும் திறன் கொண்டிருப்பதால் இந்தியாவின் கவலையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது. 
    ஆனால் இது ஒரு வழக்கமான பயிற்சியே.
  • இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளின் கடற்படை கப்பல்களை இலங்கையில் நிறுத்த அவ்வப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோலதான், சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட கப்பல் நம் வழிக்கு வந்தால் மட்டுமே அணுமதி மறுக்க முடியும். இது அணு ஆயுதம் தாங்கும் வகையிலான கப்பல் அல்ல.
  • இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்காக கப்பலை அனுப்புவதாக சீனா இலங்கையிடம் முன்னதாக தெரிவித்திருந்தது" என்றார்.
  • யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பலானது, தேவையான பொருள்களை நிரப்புவதற்கு இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்படவுள்ளது.
  • குறிப்பிட்ட அந்த சீனக் கப்பல் மிகவும் திறன் வாய்ந்த, அதிநவீன உதிரிபாகங்களைக் கொண்ட மேம்பட்ட கடற்படைக் கப்பல்  என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
  • 2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோதும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சீனா, நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியதைக் கூட, இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இலங்கைத் துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் பயணம் எதுவும் நடைபெறவில்லை.
  • சீன கப்பல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தரப்பு, "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என தெரிவித்துள்ளது.
  • 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் உள்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இச்சூழலில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா சந்தேகித்து வருகிறது.
  • கொடுத்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதையில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன நிறுவனத்திற்கு இலங்கை 2017 இல் வழங்கியது. ஏப்ரல் மாதத்தில் 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை இலங்கையால் செலுத்து முடியவில்லை. இதையடுத்து, உதவியை நாடும் வகையில் சர்வதேச நிதியத்திடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS : அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. அண்ணாமலைக்கு செக்!Priyanka Deshpande Husband : இலங்கை அரசியல் குடும்பத்தில் மருமகளான VJ பிரியங்கா! வசி யார் தெரியுமா?Tamilan Prasanna vs Old Lady : ’’1000 ரூபாய் எதுக்கு? ’’மூதாட்டி vs தமிழன் பிரசன்னாTVK PMK Alliance : தவெக - பாமக கூட்டணி?துணை முதல்வர் அன்புமணி !விஜய் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Kilambakkam: இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா போகலாம் ..! 400மீ ரயில்வே பாதை, புதிய நடைமேடை - நோ ட்ராஃபிக்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Who is Next Pope: புதிய போப் யார்? முன்னணியில் இருக்கும் அமெரிக்கர்! வாட்டிகனில் நடைப்பெறும் தேர்தல்.. முழுவிவரம்
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Pope Francis: நூறாண்டுகளில் முதல்முறை..! போப் இறப்பிற்கான காரணம்? அடக்கம் எங்கே? இறுதிச்சடங்கு எப்போது?
Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்
Putin: போதும் நிறுத்திக்கலாம்..! பேசி தீத்துக்க நான் ரெடி - உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின்
IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!
IPL 2025 GT vs KKR: மாஸ் பேட்டிங்.. பாஸ் பவுலிங்..! கொல்கத்தாவை சிதறவிட்டு குஜராத் வெற்றி!
காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Embed widget