மேலும் அறிய

Google Layoff: உலகளவில் பணிநீக்கம்.. கூகுள் நிறுவனம் இந்திய பிரிவில் 450 பேர் பணிநீக்கம்.. பீதியில் ஊழியர்கள்..

ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் சுமார் 450 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. சுந்தர் பிச்சையின் பொது அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதல் சுற்று பணிநீக்கங்கள் தொடங்கியது. இந்தியாவில் குறிப்பிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிநீக்கக் கடிதங்களைப் பெறத் தொடங்கியுள்ளனர். இந்தியா பிரிவில் இருந்து சுமார் 450 ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. கூகுள் இந்தியாவின் முக்கிய அலுவலக மையங்கள் குருகிராம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ளன.

பல பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் திடீர் விலகலை அறிவிக்க லிங்க்ட் இனுக்கு என்ற இணையதளத்தை பயன்படுத்தினர். கூகுள் இந்தியா ஊழியர் ரஜ்னீஷ் குமார் தனது  பதிவில், "கூகுள் இந்தியாவில் சமீபத்திய பணிநீக்கங்களால் மிகவும் திறமையான மற்றும் சக ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன" என குறிப்பிட்டுள்ளார். மேலும், கூகுள் இந்தியாவின் கணக்கு மேலாளர் கமல் டேவ், "இந்தியா கூகுள் நிறுவனங்களில் நடக்கும் பணிநீக்கங்களில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். கூகுளில், எனது ஆற்றல்கள் இந்தியாவில் உள்ள உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள பல தொழில்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் இலக்குகளை வழங்குவதாகும், மூலோபாய கணக்கு மேலாளர் / ஆலோசகராக பணியாற்றினேன்" என தெரிவித்துள்ளார்.  

சிங்கப்பூர் அலுவலகத்தைச் சேர்ந்த மற்றொரு பாதிக்கப்பட்ட ஊழியரான சப்தக் மோஹந்தா, "நேற்று இரவு சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கூகுள் பணிநீக்கம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக எனது பல சிறந்த சக ஊழியர்களையும் நண்பர்களையும் இழந்ததை எண்ணி மனம் உடைந்துவிட்டது" என கூறியுள்ளார்.

இதற்கிடையில், கூகுள் இந்தியா துணைத தலைவர் சஞ்சய் குப்தா  மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையும் பிசினஸ்லைன் மதிப்பிட்டுள்ளது. பிச்சையின் மின்னஞ்சலில், "பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு நாங்கள் ஏற்கனவே தனி மின்னஞ்சலை அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில், உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் "தயாரிப்பு பகுதிகள் மற்றும் செயல்பாடுகள் முழுவதும் கடுமையான மதிப்பாய்வை செய்து வருவதாக சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். கடந்த மாதம், அமெரிக்காவில் உள்ள கூகுள் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பலர் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள LinkedIn னை பயன்படுத்திக் கொண்டனர். இதில் உள்ள பல இடுகைகள், புதிய பணியாளர்கள் முதல், 20 வருடம் அனுபவமிக்க பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  

உலகெங்கும் பணிநீக்கம்:

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. 

அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
IND vs BAN LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரோஹித் - கோலி அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget