மேலும் அறிய

கண்டனம் தெரிவித்த இந்தியா..! மறுப்பு தெரிவித்த கனடா..! பகவத் கீதா பூங்கா விவகாரத்தில் நடந்தது என்ன..?

பிரம்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 'ஸ்ரீ பகவத் கீதை' பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்து, நகர நிர்வாகத்தை துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது.

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், அங்கு பிரம்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 'ஸ்ரீ பகவத் கீதை' பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்து, நகர நிர்வாகத்தை துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், பூங்காவுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் கனட அலுவலர்கள் மறுத்துள்ளனர். மேலும், பழுதுபார்க்கும் பணியின் போது வெற்று பலகை வைக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

முன்பு, டிராயர்ஸ் பார்க் என்று அழைக்கப்பட்ட இந்த பூங்கா, ஸ்ரீ பகவத் கீதா பூங்கா என மறுபெயரிடப்பட்டு செப்டம்பர் 28 அன்று திறக்கப்பட்டது. சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கனடாவில் உள்ள இந்திய தூதரகம், "பிரம்டனில் நகரில் உள்ள ஸ்ரீ பகவத் கீதை பூங்காவில் நடந்த வெறுப்பு குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.

கனட அலுவலர்கள் மற்றும் காவல்துறை விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிரம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் ஞாயிற்றுக்கிழமை இரவு ட்விட்டரில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் திறக்கப்பட்ட ஸ்ரீ பகவத் கீதை பூங்காவை சேதப்படுத்தியதாக நேற்று செய்திகள் வெளியானதை தொடர்ந்து, நாங்கள் மேலும் விசாரிக்க விரைவான நடவடிக்கை எடுத்தோம். ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என அச்சிடப்பட்டுள்ள நிரந்தர பலகை அங்கு வைக்கப்படும் வரை வெற்று பலகையானது, பூங்காவை கட்டியவரால் நிறுவப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்னையை எழுப்பிய இந்திய சமூகத்துக்கும் மேயர் நன்றி தெரிவித்தார். "இந்த முடிவைப் பற்றி அறிந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக நாங்கள் இந்திய சமூகத்திற்கு நன்றி கூறுகிறோம். மேலும், பிரம்டனை பாதுகாப்பான அனைவரும் உள்ளடக்கிய இடமாக இருப்பதை உறுதிசெய்ய உறுதி ஏற்கிறோம். 

வெற்றுப் பலகை பழுதுபார்க்கும் போது விடப்பட்டது. இது ஒரு வழக்கமான செயல்முறை அல்ல. ஏனெனில், சேதம் அல்லது அதன் பெயர் மாறாத வரை அதை அகற்றமாட்டோம்" என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

கடந்த மாதம், கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளது குறித்து இந்தியா எச்சரித்துள்ளது. கவனமாக இருக்குமாறு கனடா வாழ் இந்திய மாணவர்களை இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Embed widget