Chennai Power Cut: சென்னைல ஜனவரி 12-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Chennai Power Cut(12-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 12-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர்
- ரெட்ஹில்ஸ்
- கீழ்கொண்டையூர்
- அரக்கம்பாக்கம்
- கர்லப்பாக்கம்
- தாமரைப்பாக்கம்
- கதவூர்
- வேளச்சேரி
- பாண்டேஸ்வரம்
- காரணை
- புதுக்குப்பம்
- வாணியன் சத்திரம்
- அயிலச்சேரி
- குருவாயில்
- பூச்சி அத்திபேடு
- கொடுவள்ளி
- பால்பண்ணை சாலை
- வேல்டெக் சாலை
- கொள்ளுமேடு சாலை
- புது நகர்
- பைபாஸ் சாலை
- சோத்துப்பாக்கம் சாலை
- நியூ ஸ்டார் சிட்டி
- கள்ளிக்குப்பம்
- அழிஞ்சிவாக்கம்
- பாலாஜி கார்டன்
- ஆரோன் உல்சா சிட்டி
- வடகை
- மகாராஜா நகர்
- எம்எச் சாலை
- வினேஷ் நகர்
- திருவிக நகர்
- டிஎன்கே நகர்
- அன்பு நகர்
- விளாங்காடுபாக்கம்
- மல்லிமா நகர்
- டிஎச் ஹை ரோடு
- ஆலமரம்
- ஆலமரம்
- காந்தி நகர்
- ஆசை தம்பி தெரு மற்றும் சுற்றுயுள்ள அனைத்து பகுதிகள்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















