மேலும் அறிய

Global Competitiveness Index: ஆளுநர் ரவி சொன்னது உண்மையா? உலக போட்டித்திறன் தரவரிசையில் இந்தியாவிற்கு எந்த இடம்?

உலக நாடுகளின் போட்டித்திறன் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி, இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் போட்டித்திறன் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி, இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போட்டித் திறன் தொடர்பான ஆய்வு:

சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் "உலக போட்டித்திறன் மையம்" (WCC), தனது வருடாந்திர போட்டித்திறன் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 64 நாடுகள் இந்த தரவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த ஆய்வில், டென்மார்க், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றை தொடர்ந்து நெதர்லாந்து, தைவான், ஹாங்காங், சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், அடுத்தடுத்த இடங்களை பிடித்து முதல் 10 இடங்களை வசப்படுத்தியுள்ளன.

அயர்லாந்தின் வளர்ச்சி:

கடந்த தரவரிசை பட்டியலில் 11வது இடத்தில் இருந்த அயர்லாந்து 9 இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. திறமையான பணியாளர்கள், உயர் கல்வி பெறுதல், கொள்கை நிலைத்தன்மை, எதிர்காலத்தை கணித்து செயல்படுதல், போட்டி வரி விதிப்பு மற்றும் வணிக நட்பு சூழல் ஆகிய காரணிகளால் அயர்லாந்து இந்த பட்டியலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏழாவது இடத்திலிருந்து அயர்லாந்து தனது செயல்திறனுக்காக இந்த முறை முதலிடத்தை பிடித்துள்ளது.

சரிந்த சிங்கப்பூர்:

இந்த பட்டியலில் சிங்கப்பூர் ஒரு இடம் சரிந்து, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் முதல் இடத்தில் இருந்த அந்நாடு, 2021ல் 5வது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு 3ம் இடத்திற்கு முன்னேறியிருந்த நிலையில் இந்த முறை சரிந்துள்ளது.  இருப்பினும், சிங்கப்பூர், வேலைவாய்ப்பில் 2ம் இடத்தையும், சர்வதேச முதலீடுகளில் 4வது இடத்தையும், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா, மூன்று இடங்கள் சரிந்து, 40வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 2019-2021 காலகட்டங்களில் தொடர்ச்சியாக 43வது இடத்திலிருந்ததை விட தற்போது 3 இடங்களில் முன்னேற்யுள்ளது.  இந்திய அரசு செயல்திறனில் மேம்பட்ட நாடாக இருக்கிறது. குறிப்பாக, பரிமாற்ற விகித ஸ்திரத்தன்மை, இழப்பீட்டு நிலைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஆகியவை இந்தியாவுக்கு அதிக புள்ளிகளை பெற்று தந்துள்ளன. ஆனால் வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் மற்ற நாடுகளை விட இந்தியா சற்றே பின்தங்கி உள்ளது. 

ஆளுநர் ரவியின் பேச்சு:

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் “இந்தியாவில் பல லட்சம்  மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். பணியமர்த்தும்போது பட்டப்படிப்பை விட  தனித்திறனையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன.  தமிழகம் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்டபோது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில்  பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை  என்ற பதிலே வருகிறது. பொறியியல் படித்த 80 முதல் 90 சதவிகித மாணவர்களுக்கு  வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறுகிறார்கள். இளங்கலை பட்டம் முடித்த  70% பேருக்கும்  வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget