மேலும் அறிய

பாகிஸ்தான் மருத்துவமனை மாடியில் 200க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்கள்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் இத்தகவலை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடியில் கொத்துக்கொத்தாய் உடல்கள்

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களின்படி, முல்தானில் உள்ள நிஷ்டார் மருத்துவமனையின் பிணவறையின் மாடியில், நூற்றுக்கணக்கான மனித உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜியோ நியூஸ் எனும் பாகிஸ்தானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நிஷ்டார் மருத்துவமனையின் பிணவறையில் டஜன் கணக்கான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், மறுபுறம் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் ஆலோசகர் தகவல்

உடல்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் இதுவரை உறுதியோ மறுப்போ தெரிவிக்காத நிலையில், முன்னதாக பாகிஸ்தான் பஞ்சாப்பின் முதலமைச்சரின் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் இத்தகவலை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

ஜியோ செய்திகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நிஷ்டார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அழுகிய உடல்களைப் பற்றி பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர் தனக்குத் தகவல் அளித்ததாகத்  தெரிவித்ததாக தாரிக் ஜமான் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

"நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நபர் என்னை அணுகி, ”நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால் பிணவறைக்குச் சென்று பாருங்கள்” என தெரிவித்தார்.

நான் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை. எஃப்ஐஆர் பதிவு செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்த பிறகு சவக்கிடங்கின் கூரையை இறுதியாகத் திறந்தனர். அங்கு ​​​​குறைந்தது ஆண்கள் பெண்கள் என 200 சிதைந்த உடல்கள் இருந்தன.

 

மருத்துவமனை தரப்பிடம் இது குறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களால் ஆய்வுக்காக உடல்கள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் உடல்கள் விற்கப்படுகின்றனவா என பிணவறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினேன். 

விசாரணைக் குழு அமைப்பு

மருத்துவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சடலங்களை புழுக்கள் அரித்துக் கொண்டிருந்தன. எங்கள் கணக்கெடுப்பின்படி 35 உடல்கள் அங்கு இருந்தன.

மருத்துவக் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட உடல்கள் முறையான அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவை இவ்வாறு வீசப்பட்டுள்ளன" என்று குஜ்ஜர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பஞ்சாப் மாகாண முதலமைச்சர் பர்வேஸ் இலாஹி இச்சம்பவம் குறித்து பஞ்சாப் சிறப்பு சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி செயலாளரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.

மேலும், நிஷ்டார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget