மேலும் அறிய

பிலிப்பைன்ஸின் பயங்கர நிலச்சரிவு! ஃப்ரிட்ஜூக்குள் 20 மணி நேரம் பிழைத்திருந்த சிறுவன்…

சிறுவன் ஜாஸ்மே விழித்துக்கொண்டு இருந்ததாகவும், நிலச்சரிவின்போது ஃப்ரிட்ஜ் உருண்டு புரண்டதில் அவரது கால் மட்டும் உடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஃப்ரிட்ஜுக்குள் பதுங்கிய 11 வயது சிறுவன் உயிர்பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பேபே நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து சின்னபின்னம் ஆயின. அந்த நாட்டில் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற பெயரில் வீசிய புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள ஆற்றங்கரை ஓரத்தில் மண்ணில் லேசாக புதைந்தபடி ஒரு குளிர்சாதன பெட்டி கிடந்ததை கண்டுள்ளனர். அதை எடுத்த தீயணைப்புப் படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 11 வயது சிறுவன் உயிரோடு இருந்ததை அந்த வீரர்கள் கண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் பயங்கர நிலச்சரிவு! ஃப்ரிட்ஜூக்குள் 20 மணி நேரம் பிழைத்திருந்த சிறுவன்…

அந்த சிறுவன் அங்கு வந்தது குறித்து அவரிடம் வீரர்கள் விசாரித்ததில், பெயர் சிஜே ஜாஸ்மே என்பது தெரியவந்தது. அதிக வேக காற்றுடன் புயல் வீசியதாகவும், அதனைக் கண்டு பயந்து தப்பிக்க வழி தேடியதாகவும், எல்லா இடங்களும் ஆபத்துக்குரிய இடமாக இருந்ததாகவும், அப்போது இந்த ஃப்ரிட்ஜை கண்டதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு பிரிட்ஜுக்குள் சென்று ஒளிந்துகொண்டதாக அந்த சிறுவன் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஃப்ரிட்ஜை திறந்து சிறுவனை மீட்டதும் அவர் சொன்ன முதல் வார்த்தை 'பசிக்கிறது' என்பதுதான் என அவரை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் கூறினர். ஃப்ரிட்ஜிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெட்சரில் வைத்து எடுத்துச் செல்லப்படும்போதெல்லாம் பசிக்கிறது, பசிக்கிறது என்று கூறிக்கொண்டே வந்துள்ளார். மீட்கும்போது, சிறுவன் ஜாஸ்மே விழித்துக்கொண்டு இருந்ததாகவும், நிலச்சரிவின்போது ஃப்ரிட்ஜ் உருண்டு புரண்டதில் அவரது கால் மட்டும் உடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸின் பயங்கர நிலச்சரிவு! ஃப்ரிட்ஜூக்குள் 20 மணி நேரம் பிழைத்திருந்த சிறுவன்…

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ் காவல்துறை, சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். அவரது தந்தை வேறொரு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது தாய் மற்றும் தங்கையை குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதேபோல் சிறுவனின் 13 வயது மூத்த சகோதரனும் நிலச்சரிவிலிருந்து தப்பித்து இருப்பார் என்று போலீசார் நம்புகின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பேபே நகரில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர், 200 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். இந்த புயல் காரணமாக அந்த மாகாணத்தைவிட்டு 20 கோடி பேர் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் சேரும், சகதியுமாக காட்சி தருவதால் மீட்புப்பணிகள், மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget