மழை வரும் முன் நடவடிக்கை தேவை... வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுமக்கள் புகார் மனு
2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.

விழுப்புரம்: வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வடக்கிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் நகராட்சி 32 வது வார்டிற்குட்பட்ட கௌதம் நகர் மற்றும் ஸ்ரீராம் நகர், வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், சாலாமேடு ஐயா, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்து போய் இருப்பதால் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு மேற்கண்ட 20க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய சூழ்நிலை இருக்கிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள். இதுகுறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















