மேலும் அறிய

Villupuram: வானூர் பகுதியில் சட்டவிரோத கனிமவள கொள்ளை - முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் அளித்த கவுன்சிலர்கள்

சுமார் ரூ.20 கோடிக்குமேல் கல் உடைத்து சட்டவிரோதமாக வேலை செய்து, அரசாங்கத்தை ஏமாற்றி வருமானம் ஈட்டி வருகிறார். அவருக்குத் துணையாக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்று கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

விழுப்புரம்: வானூர் அருகே சட்ட விரோத கல் குவாரி நடத்தி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுத்திடகோரி வானூர் பகுதி கவுன்சிலர்கள் முதல்வர் தனி பிரிவிற்கு புகார் அளித்தனர்.

கனிமவள கொல்லை

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனிம வளம் மிகவும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செழித்து வந்த நிலையில் தற்போது அரசு அனுமதி இல்லாமல் அப்பகுதியில் கல்குவாரிகள், செம்மண் கோரிகள் என கனிமவளக் கொள்ளைகள் ஈடுபட்டு வருவது வெட்ட வெளிச்சமாக அப்பகுதியில் தெரிகிறது. இருப்பினும் அப்பகுதியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். கனிமவள கொள்ளையால் விவசாயம் பாதித்துள்ளது. இந்த நிலையில் வானூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.


Villupuram: வானூர் பகுதியில் சட்டவிரோத கனிமவள கொள்ளை - முதலமைச்சர்  தனி பிரிவிற்கு புகார் அளித்த கவுன்சிலர்கள்

புகாரில் கூறிருப்பதவாது...

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், சுத்துக்கேணி அஞ்சல், கடகம்பட்டு கிராமம், மேட்டுத்தெரு, எண்.63 என்ற விலாசத்தில் வசித்து வரும் பெருமாள் குமாரர் லோகநாதன் என்பவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் சர்வே எண்.101-ல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணை ந.க.அ/பு & சு/1039/2015 நாள் 02.02.2020 குத்தகை காலம்  25.07.2020 முதல் 24.07.2025 வரை அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சர்வே எண்.100/2B-ல் உள்ள சுமார் ஏக்.2.00 நிலத்தை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி கிரையம் பெற்று, அரசு குத்தகை அனுமதி பெறாமல் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லஞ்சம் கொடுத்து மேற்படி இடத்தில் 200 அடி ஆழத்திற்கு வெடி வைத்து கல் குவாரி நடத்தி வருகிறார். அரசு அனுமதி பெற்ற இடத்தைவிட அனுமதி பெறாத சர்வே எண்.100/2B இடத்தில் சுமார் ரூ.20 கோடிக்குமேல் கல் உடைத்து சட்டவிரோதமாக வேலை செய்து, அரசாங்கத்தை ஏமாற்றி வருமானம் ஈட்டி வருகிறார். அவருக்குத் துணையாக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். எனவே ஐயா அவர்கள், மேற்படி சர்வே எண்.100/2B -ல் உள்ள கல்குவாரியில் நடக்கும் வேலையை நேரில் பார்வையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  13வது வார்டு கவுன்சிலர் புகாரில் குறிபிட்டுள்ளார்.


Villupuram: வானூர் பகுதியில் சட்டவிரோத கனிமவள கொள்ளை - முதலமைச்சர்  தனி பிரிவிற்கு புகார் அளித்த கவுன்சிலர்கள்

அதி பயங்கர வெடி

தொடந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கடகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு.S.M.N சக்திமுருகன் என்பவர் லோகநாதன் த/பெ பெருமாள் என்பவர் பெயரில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் சர்வே எண். 100/2B -ல் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தை 19.01.2022 ஆம் தேதியில் கிரையம் பெற்றார். அந்த நிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்தி வருகிறார். அதி பயங்கர வெடி வைத்து சுமார் 200 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி வி விலை உயர்ந்த கிரானைட் கற்களை மேற்கண்ட திரு.S.M.N சக்திமுருகன் என்பவர் கடத்தி சுமார் ரூ.30 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளார். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய விசாரணை செய்து சட்ட விரோதமாக கனிமவள கொல்லையில் ஈடுபட்டவர் மீதும், முறைகேட்டிற்கு துணை நின்ற அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வானூர் 23து வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி மாகலிங்கம் புகாரில் குறிபிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Embed widget