மேலும் அறிய

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று (24.01.2023) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார்கள். மேலும்,மீனவர்கள் தங்களின் வாழ்வாதார தொழிலான மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. இறாலின் ஏற்றுமதி மதிப்பின் காரணமாக அதிக இலாபம் ஈட்டப்படுவதால் உவர்நீர் இறால் வளர்ப்பு 1991-1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் தொடங்கியது. உலக சந்தையில் இறால் மற்றும் இறால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் இறால் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பால் இயற்கையாக அதனை நிரப்பும் விதமாக இறால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.

இயற்கையாக கிடைக்கும் இறாலின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் முறையான இடத்தேர்வுடன் உரிய பதிவுகள் பெற்று உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறாலின் தேவைப்பாடு ஈடுசெய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு பரப்பு 56,000 ஹெக்டேர் அதனில் சாகுபடி மேற்கொள்ள உகந்த பரப்பு 18,000 ஹெக்டேரில் 8,400 ஹெக்டேர் பரப்பு இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் இயற்கை இடர் மற்றும் இதர பிரச்சனைகளால் தற்பொழுது அதனில் பாதிஅளவு 55.3மூ உவர்நீர்ப்பரப்பில் 4800 ஹெக்டேரில் மட்டுமே இறால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதிலிருந்து 35,000/- 40,000/- மெட்ரிக் டன் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்படி விழுப்புரத்தில் 2072 ஹெக்டேர் உகந்த இடமாக இருப்பினும் 140 ஹெக்டேர் உவர்நீர் பரப்பு மட்டுமே இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் தற்பொழுது உற்பத்தி கடந்த வருடத்தில் 1500 மெட்ரிக் டன்னாக உள்ளது. 97% இறால் பண்ணைகள் 2 ஹெக்டேருக்கு கீழ் உள்ளன. 3% இறால் பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேருக்கு மேல் உள்ளது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 இறால் பண்ணைகள் முறையாக பதிவுகள் மேற்கொண்டு 128.82 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் 39 எண்ணிக்கை விழுப்புரம் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இறால் குஞ்சு பொறிப்பகத்தில் ஆண்டிற்கு 5,560 மில்லியன் PL உற்பத்தி செய்யப்படுகிறது. இதனில் 40-45% எண்ணிக்கையிலான இறால்  குஞ்சுகள் உள்ளுரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 50-55% எண்ணிக்கையிலான இறால் குஞ்சுகள் இதர மாநிலமான கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்கள் மூலம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் 200 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 1500 பணியாளர்கள் இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இறால் பண்ணை மூலம் பெறப்பட்ட நிகர இலாபம் தோராயமாக ரூ.18 கோடி மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகத்தின் நிகர இலாபம் தோராயமாக ரூ.67 கோடி வரை ஈட்டப்பட்டுள்ளது.

இதுவரை இறால் பண்ணை பதிவு மேற்கொள்ள பரிந்துரை மாவட்ட அளவிலான குழு மூலம் செய்யப்பட்டது. அதனை இன்னும் எளிதாக்கும் வகையில் துணை பிரிவு அளவிலான குழுவால் (Sub Divisional Level Committee) 5 ஹெக்டேர் வரை பதிவு செய்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமும், 5 ஹெக்டேருக்கு மேல் உள்ள இறால் பண்ணைகள் மாவட்ட அளவிலான குழு மூலம் அனுமதி பெற்ற பின்னரே இறால் பண்ணை அமைத்திட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பிரதான் மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் இறால் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக 1 ர்ய அளவில் பண்ணை அமைத்திட 40% மானியமாக ரூ.14 இலட்சத்தில் ரூ.5.60 இலட்சத்து மானியத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் உயிர் கூழ்ம திரள் முறையில் உவர்நீர் இறால் வளர்ப்பு (Bio-Floc System) தொழில்நுட்ப முறையில் 40% மானியமாக ரூ.18 இலட்சத்தில் ரூ.7,20,000/- வீதம் மானியம் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், PMMSY திட்டத்தில் (National Fisheries Development Board) தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் "இறால் பயிர் காப்பீடு" என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 0.5 Ha - 2 Ha வரை பண்ணை வைத்திருப்போர் காப்பீடு செய்து பயன்பெறலாம். 1Ha -க்கு காப்பீடு தொகை ரூ.18,880 முதல் ரூ.28,320/- வரை உள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெலி பகுதியினை சுற்றி அமைந்திருக்கும் மற்றும் அமைக்கப்படும் இறால் பண்ணை உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணைப்படி கழுவெலி பகுதிக்கு எவ்வித சேதம் ஏற்படுத்தாமலும், பைப்லைன் பதித்தல் ஏதும் இல்லாமல் Coastal Auaculture authority-யின் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளை பின்பற்றி சூழ்நிலை பாதிப்பு ஏதும் எழாவண்ணம் சிறப்பான இறால் வளர்ப்பினை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இறால் குஞ்சு பொறிப்பகங்களும் தரமான Post Larva-க்களை உற்பத்தி செய்து இறால் உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். அரசு நலத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறை மூலம் உரிய பதிவுகள் மேற்கொண்டு விவசாயிகள் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் புரத உணவு பொருள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அந்நியச் செலவாணியை அதிகரிக்கச் செய்திட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget