மேலும் அறிய

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று (24.01.2023) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார்கள். மேலும்,மீனவர்கள் தங்களின் வாழ்வாதார தொழிலான மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பம் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடனான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. இறாலின் ஏற்றுமதி மதிப்பின் காரணமாக அதிக இலாபம் ஈட்டப்படுவதால் உவர்நீர் இறால் வளர்ப்பு 1991-1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறிப்பாக ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் தொடங்கியது. உலக சந்தையில் இறால் மற்றும் இறால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் இறால் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பால் இயற்கையாக அதனை நிரப்பும் விதமாக இறால் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்.

இயற்கையாக கிடைக்கும் இறாலின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் முறையான இடத்தேர்வுடன் உரிய பதிவுகள் பெற்று உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறாலின் தேவைப்பாடு ஈடுசெய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு பரப்பு 56,000 ஹெக்டேர் அதனில் சாகுபடி மேற்கொள்ள உகந்த பரப்பு 18,000 ஹெக்டேரில் 8,400 ஹெக்டேர் பரப்பு இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் இயற்கை இடர் மற்றும் இதர பிரச்சனைகளால் தற்பொழுது அதனில் பாதிஅளவு 55.3மூ உவர்நீர்ப்பரப்பில் 4800 ஹெக்டேரில் மட்டுமே இறால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதிலிருந்து 35,000/- 40,000/- மெட்ரிக் டன் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்படி விழுப்புரத்தில் 2072 ஹெக்டேர் உகந்த இடமாக இருப்பினும் 140 ஹெக்டேர் உவர்நீர் பரப்பு மட்டுமே இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டதில் தற்பொழுது உற்பத்தி கடந்த வருடத்தில் 1500 மெட்ரிக் டன்னாக உள்ளது. 97% இறால் பண்ணைகள் 2 ஹெக்டேருக்கு கீழ் உள்ளன. 3% இறால் பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேருக்கு மேல் உள்ளது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 98 இறால் பண்ணைகள் முறையாக பதிவுகள் மேற்கொண்டு 128.82 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் 39 எண்ணிக்கை விழுப்புரம் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இறால் குஞ்சு பொறிப்பகத்தில் ஆண்டிற்கு 5,560 மில்லியன் PL உற்பத்தி செய்யப்படுகிறது. இதனில் 40-45% எண்ணிக்கையிலான இறால்  குஞ்சுகள் உள்ளுரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 50-55% எண்ணிக்கையிலான இறால் குஞ்சுகள் இதர மாநிலமான கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்கள் மூலம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதுடன் 200 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 1500 பணியாளர்கள் இறால் பண்ணை மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகங்களில் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இறால் பண்ணை மூலம் பெறப்பட்ட நிகர இலாபம் தோராயமாக ரூ.18 கோடி மற்றும் இறால்குஞ்சு பொறிப்பகத்தின் நிகர இலாபம் தோராயமாக ரூ.67 கோடி வரை ஈட்டப்பட்டுள்ளது.

இதுவரை இறால் பண்ணை பதிவு மேற்கொள்ள பரிந்துரை மாவட்ட அளவிலான குழு மூலம் செய்யப்பட்டது. அதனை இன்னும் எளிதாக்கும் வகையில் துணை பிரிவு அளவிலான குழுவால் (Sub Divisional Level Committee) 5 ஹெக்டேர் வரை பதிவு செய்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடமும், 5 ஹெக்டேருக்கு மேல் உள்ள இறால் பண்ணைகள் மாவட்ட அளவிலான குழு மூலம் அனுமதி பெற்ற பின்னரே இறால் பண்ணை அமைத்திட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் இறால் பண்ணை அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பிரதான் மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் இறால் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக 1 ர்ய அளவில் பண்ணை அமைத்திட 40% மானியமாக ரூ.14 இலட்சத்தில் ரூ.5.60 இலட்சத்து மானியத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் உயிர் கூழ்ம திரள் முறையில் உவர்நீர் இறால் வளர்ப்பு (Bio-Floc System) தொழில்நுட்ப முறையில் 40% மானியமாக ரூ.18 இலட்சத்தில் ரூ.7,20,000/- வீதம் மானியம் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், PMMSY திட்டத்தில் (National Fisheries Development Board) தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் "இறால் பயிர் காப்பீடு" என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 0.5 Ha - 2 Ha வரை பண்ணை வைத்திருப்போர் காப்பீடு செய்து பயன்பெறலாம். 1Ha -க்கு காப்பீடு தொகை ரூ.18,880 முதல் ரூ.28,320/- வரை உள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெலி பகுதியினை சுற்றி அமைந்திருக்கும் மற்றும் அமைக்கப்படும் இறால் பண்ணை உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணைப்படி கழுவெலி பகுதிக்கு எவ்வித சேதம் ஏற்படுத்தாமலும், பைப்லைன் பதித்தல் ஏதும் இல்லாமல் Coastal Auaculture authority-யின் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளை பின்பற்றி சூழ்நிலை பாதிப்பு ஏதும் எழாவண்ணம் சிறப்பான இறால் வளர்ப்பினை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இறால் குஞ்சு பொறிப்பகங்களும் தரமான Post Larva-க்களை உற்பத்தி செய்து இறால் உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். அரசு நலத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறை மூலம் உரிய பதிவுகள் மேற்கொண்டு விவசாயிகள் இறால் வளர்ப்பு மேற்கொண்டு இறால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் புரத உணவு பொருள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அந்நியச் செலவாணியை அதிகரிக்கச் செய்திட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Chennai Power Shutdown: சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Chennai Power Shutdown: சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
US Visa Restrictions: குண்டா இருக்கீங்களா.? அப்போ இனிமே அமெரிக்கா போறது கஷ்டம்தான்; விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்
குண்டா இருக்கீங்களா.? அப்போ இனிமே அமெரிக்கா போறது கஷ்டம்தான்; விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்
TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
புது வீடு கட்ட போறீங்களா.? அப்போ இதெல்லாம் இல்லைன்னா சிக்கல் தான்- அரசு முக்கிய உத்தரவு
புது வீடு கட்ட போறீங்களா.? அப்போ இதெல்லாம் இல்லைன்னா சிக்கல் தான்- அரசு முக்கிய உத்தரவு
Top 10 News Headlines: 3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
Embed widget