மேலும் அறிய

வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் மட்டம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் வீராணம் ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங் குழி ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இரண்டு நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 அடியாக அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் ஏரியின் நீர்மட்டம் 47 அடியை எட்டியது.


வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் மட்டம்

இதைத் தொர்டர்ந்து லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதே போல் சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகின் வழியாக நீர் திறப்பானது வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டது. அதாவது ஏரியில் இருந்து மொத்தம் 2400 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வந்தது

இதனால், இந்த ஏரிக்கு மேட்டூர் அணை நீர் வரத்து மற்றும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது, இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் காரணமாக வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை வைத்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இதற்கான அறுவடை தற்போது நடந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.


வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் மட்டம்

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.90 அடியாக குறைந்தது.

நேற்று வீராணம் ஏரிக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அது இன்று 333 கனஅடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை நடந்து வருவதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இருப்பினும் சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து 61 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget