மேலும் அறிய

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்

இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது

மார்கழி மாதம் பனிப்பொழிவு துவங்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே பனிப்பொழிவு துவங்கியது, பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி நிலவியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கடலூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கிய முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. 
 

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆற்றை, பார்த்த போது, ஆறு தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டமாக இருந்தது இதேபோல் திருவந்திபுரம் பகுதியிலும் பாலத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கெடிலம் ஆற்றினை புகை மண்டலம் போல் பனி சூழ்ந்து காணப்பட்டது, மேலும் பெரும்பாலான விளைநிலங்களையும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்தது, ரயில் தடங்களும் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு காட்சி அளித்தது. பின்னர் காலை விடிந்த பிறகும் சூரியன் உதித்தாலும், அதன் கதிர்கள் தெரியாத அளவுக்கு உறை பனியாக இருந்ததை பார்க்க முடிந்தது, மேலும் பனிப்பொழிவு காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பனி மூட்டமாக காணப்பட்டது.
 

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
மேலும் கடலூரின் முக்கிய சாலைகளான பாரதி சாலை, அண்ணா சாலை போன்ற சாலைகளில் கடந்த ஆண்டு தொடங்கிய மார்கழி மாதத்தில் இருந்து தற்போது வரை கடலூரில் இந்த அளவிற்கு பணி பொழிந்தது இல்லை , அதிக அளவில் பணி பொழிந்ததால் குளிர் பிரதேசங்களில் இருக்கும் பனி மூட்டத்தை போன்று காட்சி அளித்ததாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடலூரில் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்த கடும் பனிமூட்டம்
 
இதே போல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 8.30 மணியை தாண்டியும் நீடித்தது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொங்கலுக்காக பானை, கரும்பு, மஞ்சள் போன்ற பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர், பின்னர் காலை 9 மணிக்கு மேல் பனி குறைந்து சூரியன் வெளியே தெரிய தொடங்கியது , பின்னரே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget