மேலும் அறிய

விழுப்புரம் அருகே சோகம்... கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தபோது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவகரையை சேர்ந்தவர் கஸ்பர். இவரது மகள் அலானா (வயது6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அலானா நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது,எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

இது குறித்து வானூர் போலீசாருக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி அலானா உடலை மீட்டனர். இது குறித்து வானூர் காவல் ஆய்வாளர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவக்கரை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. கல் எடுத்து பின் அதனை மூடாமல் விட்டு சென்றதால் அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் பலர் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"குவாரியில் 100 அடியில் இருந்து 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது"

வானுார் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குவாரிகள் உள்ளன. குறிப்பாக அரசு அனுமதி பெற்ற 20 குவாரிகளும், 80க்கும் மேற்பட்ட கல் அரவை தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.இங்கு, வெடி வைத்து பாறைகளை உடைத்த பின், அதே பகுதிகளில் உள்ள கல் அரவை தொழிற்சாலைகளுக்கு ஜல்லி, கிரஷர் பவுடராக மாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுவதால், வழியெல்லாம் கற்கள் கொட்டிய படி செல்கிறது. குறிப்பாக கிரஷர் பவுடர் ஏற்றி செல்லும் வாகனங்களில் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால், அதில் இருந்து பறக்கும் பவுடர்கள், சாலையோர வீடுகள் மீது படிவதோடு, சாலைகளிலும் கொட்டியபடியே செல்கிறது.

இதனால், பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கண்களில் துாசு விழுந்தும், கண் எரிச்சலாலும், சுவாச கோளாறாலும் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி குவாரி மற்றும் அரவை தொழிற்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல வசதியாக ஏரி மற்றும் பாசன கால்வாய்களை துார்த்து சாலை வசதி செய்ததால், பாசனம் பாதிப்பு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் குறைந்து போனது.கனரக வாகனங்களால் கிராமப்புற சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன.

குவாரியில் 100 அடியில் இருந்து 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. ஆழமாக கற்கள் தோண்டப்பட்ட சில குவாரிகள் தற்போது மூடியே கிடக்கிறது. அங்கு பாதுகாப்பு வேலி அமைக்காததால் குளிக்கச் செல்பவர்கள், தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.