மேலும் அறிய

கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

’’விபத்து நடந்ததற்கு டிரைவர் தூங்கியது தான் காரணமா இல்லை வேறேதும் காரணம் உள்ளதா விசாரணை நடத்தி வருகின்றனர்’’

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியைச் சேர்ந்தவர் ராமு (65) இவர் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார், இவருடைய மனைவி லலிதா (60). இவர்களது மகள் பிரேமலதா. இவர் சென்னை ஆவடி காமராஜ் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராமுவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவா் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து ,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். இதற்காக அவரது மருமகன் ரமேஷ், தனது காரை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த காரை சென்னை ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியை சேர்ந்த கோதண்டம் (45) என்பவர் ஓட்டி சென்று உள்ளார். இதையடுத்து அந்த காரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சொந்த ஊரில் இருந்து ராமு, லலிதா ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர்.


கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

கடலூர் பச்சையாங்குப்பம் பகுதி அருகே  நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கோதண்டம், லலிதா ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.


கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

இது குறித்த தகவலின் பேரில் கடலூர் துறைமுகம் காவல் துறையினர், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு உள்ளான கார் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விபத்து நடந்ததற்கு டிரைவர் தூங்கியது தான் காரணமா இல்லை வேறேதும் காரணம் உள்ளதா விசாரணை நடத்தி வருகின்றனர் ஏனெனில், சென்னை நோக்கி சென்றுகொண்டு இருந்த கார் இடது புறத்தில் இருந்து வடது புறத்தில் இருந்த மரத்தில் இடித்துள்ளது. விபத்தில் பலியான டிரைவர் கோதண்டத்திற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், நிர்மல் என்கிற மகன், மற்றும் கீர்த்தனா என்கிற மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது  குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget