ராமதாஸ் அதிரடி! அன்புமணி செயல்தலைவர் பதவி ஏற்க மறுப்பு, கூட்டணி குறித்து ஆலோசனை!
எல்லா பொறுப்புகளை விட சிறந்த பொறுப்பாக அன்புமணிக்கு செயல்தலைவர் வழங்கியதை அன்புமணி ஏற்க மறுக்கிறார், மூச்சுகாற்று உள்ளவரை பாமகவின் தலைவராக இருக்க மனசாட்சி கூறியது - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து பொதுக்குழு நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கப்படும் என்றும் எல்லா பொறுப்புகளை விட சிறந்த பொறுப்பாக அன்புமணிக்கு செயல்தலைவர் வழங்கியதை அன்புமணி ஏற்க மறுப்பதாகவும், மூச்சுகாற்று உள்ளவரை பாமகவின் தலைவராக இருக்க மனசாட்சி கூறியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் அன்புமணி மன்னிப்பு கேட்டது பிரச்சனை இல்லை என்னால் துவங்கப்பட்ட பாமக கட்சியில் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன்,
தனக்கு மூச்சு இருக்கும் வரை கட்சியின் தலைவராக செயல்படுவேன இது கலைஞர் கருணாநிதியின் பாணி என கூறினார். தன்னலம் கருதாது மக்களுக்கு தொண்டாற்றியவர்களுக்கு பாமகவில் நல்ல பொறுப்புகளை கொடுத்துள்ளதாகவும் அந்த பொறுப்புகள் நிரந்தமாக நிலைத்து நீடித்திருக்கும் என்றும்
புதிய பொறுப்புகள் வழங்கியவர்களுக்கு அச்சத்தையும் போக்கி உள்ளதாக தெரிவித்தார். தனது 60 வது திருமண நாளில் அண்புமணி தன்னை சந்திக்க வராதது மன வருத்தம் தான் ஒரு தந்தையாக என்ன மனநிலையோ அந்த மனநிலை இருந்ததாக கூறினார்.
தைலாபுரம் வீட்டின் முன்பாக போஸ்டர்கள் கிழித்தது விஷகிருமிகளாக இருக்கலாம் யார் பன்னது என்று தெரியாது யார் படத்தையும் கிழிக்க கூடாது என வலியுறுத்திய அவர் தனக்கு முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை என்றும் அந்த மாநாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்த எந்த தலைவர்களையும் கொச்சை படுத்த கூடாது இது அரசியல் கட்சி நடத்துகிற அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோளாக வைப்பதாக தெரிவித்தார். பொதுக்குழு கூட்டம் தேர்தல் நெருங்கிற சமயத்தில் கூட்டி என்ன முடிவு எடுக்கலாம் என கேட்கப்படும் என்றும்
அதற்கு முன்னதாக நிர்வாக குழு, மாநில செயற்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும், கட்சியின் தலைவராக ஆகிவிட்டேன் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து பொதுக்குழு நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கப்படும், எல்லா பொருப்புகளை விட சிறந்தது செயல்தலைவர் பதவி அந்த பொறுப்பினை அன்புமணிக்கு கொடுத்து இருக்கிறோம் அவர் அதனை ஏற்க மாட்டேன் என்கிறார் என கூறினார்.
நாகரீகமாக நளினமாக இருவார்த்தைகளை கலைஞர் கருணாநிதியிடம் கற்றுகொண்டதாகவும், பதவி சுகத்தினை நான் விரும்பி இருந்தால் மத்தியில் எந்த பொறுப்பும் தனக்கு கிடைத்திருக்கும் பிரதமர் மோடி தன்னிடம் அன்பாக இருக்கிறார். அரசு கட்டிலுக்கு எப்போதும் போக மாட்டேன் அரசு சுகம் காணமாட்டேன் என்று கட்சி காரர்களை தொண்டர்களை உயர்த்தி உயர்த்தி பார்த்தவனாக தான் உள்ளதாக தெரிவித்தார்.
தன் மூச்சு காற்று உள்ளவரை தலைவராக இருக்க வேண்டும் என தன் மனசாட்சி சொல்லியதால் தலைவராக இருப்பேன் என்றும் என் மூச்சு காற்று அடங்கிய பின் பொறுப்பிற்கு வரபோவது யார் முகுந்தனோ சுகந்தனோ வரப்போவதில்லை என தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்தறவனுக்கு இரண்டு வருடம் தண்டனை என்றால் விற்பனை செய்பவர்களுக்கு நான்கு வருடமாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர் அன்புமணியிடம் சென்றவர்களின் மனசாட்சி தப்பு என்று தெரிந்ததால் மீண்டும் தன்னிடமே வருகிறார்கள், பாமகவில் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கியுள்ளேன் ஓய்வறியா உழைப்பாளியாக ஜி கே மணியை உருவாக்கி உள்ளதாகவும், 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டமாக தமிழகத்தில் நடத்துவோம் ஆனால் அந்த அளவிற்கு போகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




















