பொதுமக்கள் விண்ணப்பங்களை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும் - விழுப்புரம் கலெக்டர் அதிரடி உத்தரவு !
பொதுமக்கள் விண்ணப்பங்களை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக அரசின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள சாதிச் சான்றிதழ், உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு, இணைய வழி சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு இனங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள இணையவழி விண்ணப்பங்களை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணையதள விண்ணப்பங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரியான முறையில் விசாரித்து விரைவாக இணையதள சான்றுகளை பொதுமக்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் இணையதள விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய நேரிடுமானால் அதற்கான சரியான காரணங்களை விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். எனவே, இணையதள விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் பரிசீலனை செய்து இணையதள சான்றுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் நில அளவை சம்மந்தமாக வரப்பெறும் விண்ணப்பங்களை உடனுக்குடன் நில அளவை மேற்கொண்டு முடிக்க அனைத்து வட்டங்களில் பணியாற்ற கூடிய நில அளவையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களிடம் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் 67601 மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















