மேலும் அறிய

தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட பொம்மையார் பாளையத்தில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், பெரியமுதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் நொச்சிக்குப்பம் மற்றும் கூனிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், ’’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்

அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, கடலோரப்பகுதி ஒட்டியமைந்துள்ள வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பேரிடர் காலங்களில் 500 நபர்கள் வரை தங்க இடவசதி உள்ளது.

எனவே, இம்மையத்தில், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாப்பு வசதி, மருத்துவ முதலுதவி வசதி, ஜெனரேட்டர் வசதி, புயல் போன்ற இயற்கை பேரிடர் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் அபாய ஒலி கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக குளோரினேஷன் முறையில் சுத்தம் செய்வதற்கான பொருட்களை பார்வையிட்டதுடன், அவ்வப்பொழுது குளோரினேஷன் செய்த குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் 

மேலும் பேரிடர் காலத்தில், பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில், அவசர உதவி கைப்பேசி எண்ணினை பொதுஇடங்களில் ஒட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திலும் 500 நபர்கள் வரை தங்குவதற்கான இடவசதி உள்ளது.

இம்மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக போர்வை, கொசுவர்த்தி, டார்ச்லைட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அப்பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் பேரிடர் கால பல்நோக்கு மையங்களை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

நொச்சிக்குப்பம் பேரிடர்க் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்

தொடர்ந்து, மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், புயல் எச்சரிக்கை குறித்து அபாய ஒலி எழுப்பும் கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கூனிமேட்டில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், அவசரகால ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, நல்ல முறையில் இயங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget