மேலும் அறிய

தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட பொம்மையார் பாளையத்தில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், பெரியமுதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம், கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் நொச்சிக்குப்பம் மற்றும் கூனிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், ’’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்

அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, கடலோரப்பகுதி ஒட்டியமைந்துள்ள வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பேரிடர் காலங்களில் 500 நபர்கள் வரை தங்க இடவசதி உள்ளது.

எனவே, இம்மையத்தில், மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாப்பு வசதி, மருத்துவ முதலுதவி வசதி, ஜெனரேட்டர் வசதி, புயல் போன்ற இயற்கை பேரிடர் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் அபாய ஒலி கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக குளோரினேஷன் முறையில் சுத்தம் செய்வதற்கான பொருட்களை பார்வையிட்டதுடன், அவ்வப்பொழுது குளோரினேஷன் செய்த குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் 

மேலும் பேரிடர் காலத்தில், பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில், அவசர உதவி கைப்பேசி எண்ணினை பொதுஇடங்களில் ஒட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரிய முதலியார்சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திலும் 500 நபர்கள் வரை தங்குவதற்கான இடவசதி உள்ளது.

இம்மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக போர்வை, கொசுவர்த்தி, டார்ச்லைட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அப்பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோட்டக்குப்பம் பேரிடர் கால பல்நோக்கு மையங்களை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தொடங்கிய வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் தயார் நிலையில் பேரிடர்க்கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்!

நொச்சிக்குப்பம் பேரிடர்க் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம்

தொடர்ந்து, மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், புயல் எச்சரிக்கை குறித்து அபாய ஒலி எழுப்பும் கருவியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கூனிமேட்டில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், அவசரகால ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, நல்ல முறையில் இயங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
மதிய உணவுக்கு வீட்டுக்கு போகக் கூடாது; மீறினால் நடவடிக்கை! புதுச்சேரி அதிகாரிகளுக்குப் புதிய கட்டுப்பாடு!
மதிய உணவுக்கு வீட்டுக்கு போகக் கூடாது; மீறினால் நடவடிக்கை! புதுச்சேரி அதிகாரிகளுக்குப் புதிய கட்டுப்பாடு!
எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
ஆரோவில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு : ரூ.300 கோடி நிதி ஆதரவுடன் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget