மேலும் அறிய

தொடங்கிய வடகிழக்கு பருவமழை - கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

’’முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க உத்தரவு’’

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர் நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து கண்காணித்து, அதற்கு ஏற்றார்போல் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
 

தொடங்கிய வடகிழக்கு பருவமழை - கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
 
மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகள், மிக தாழ்வானவை என 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்துத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படவேண்டிய இடங்களில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 
 
முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் பணிபுரிய தயார் நிலையில் இருக்கவேண்டும். அவசர சேவை ஊர்திகளும், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களை பாதுகாத்து மீட்டு வருவதற்கு படகுகளையும், பொது மக்களை பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான வாகனங்களையும் தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
பின்னர் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடர் தொடர்பான தகவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கடலூர் பேரிடர் கால வானொலி 107.8 பண்பலை அலைவரிசையில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சென்று, அங்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தொடங்கிய வடகிழக்கு பருவமழை - கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மழையால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏதாவது பாதிப்பு என்றால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அனைத்துத் துறையினரும் இணைந்து உடனடியாக பணியாற்ற முடியும். மேலும் அடிக்கடி இயற்கை சீற்றத்திற்கு உள்ளாகி வரும் கடலூர் மாவட்டத்திற்கு தேவையான நிரந்த தீர்வு குறித்து அனைத்துத்துறையினருடன் கலந்தாலோசித்து ஒரு தீர்வு காணப்படும். தற்போது மாவட்டத்தில் தேவையான அளவு மணல் மூட்டைகளும், மரம் அறுக்கும் எந்திரங்களும், மின்மோட்டார் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 
தகவல் தொடர்பு எண்கள்:
 
1077 (டோல்ஃப்ரீ) கட்டுப்பாட்டு அறை - 04142-233933
 04142-221383
 04142-221113
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் அருகே வரலாற்றுப் பொக்கிஷம்: 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால 'கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு!
விழுப்புரம் அருகே வரலாற்றுப் பொக்கிஷம்: 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால 'கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு!
நாராயணசாமியின் உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதா? - கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து அன்பழகன் ஆவேசம்!
நாராயணசாமியின் உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதா? - கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து அன்பழகன் ஆவேசம்!
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
சினிமா பாணியில் தப்பி ஓட்டம்.. செய்தியாளர்களைத் திசைதிருப்பி காரில் பறந்த சசிகலா: தைலாபுரத்தில் நடந்தது என்ன?
திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
திமுகவை அழிக்கவே பிறந்தவர் உதயநிதி! - விக்கிரவாண்டியில் சீறிய நாஞ்சில் சம்பத்!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget