மேலும் அறிய

தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான்; யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் புகுத்த முடியாது என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.02.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சாலை அகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
 
அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மற்றொரு வரலாற்று சிறப்பு நிகழ்வாக, அனைவருக்கும் குறைந்த விலையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருத்துகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், 15.08.2024 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
 
அதனடிப்படையில், இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் ஊராட்சியில், கூட்டுறவுத்துறை சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
 
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm /D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருத்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் விழுப்புரம் மாவட்டத்தில் 22 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 01 தொழில்முனைவோர் என மொத்தம் 23 முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட ஒப்புதல் பெறப்பட்டு மார்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சாலை அகரம், கண்டமங்கலம், மேல்வைலாமூர், விழுக்கம், சித்தலிங்கமடம், அரகண்டநல்லூர், இரும்பை, மரக்காணம், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, விக்கிரவாண்டி, கோணை, அன்னியூர், காணை, சாத்தாம்பா, ஆவணிப்பூர், வளவனூர், நேமூர், கண்டாச்சிபுரம், கெடார், ஜி.செம்மேடு, ஆலங்குப்பம், செஞ்சி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக முதல்வர் மருந்தகங்களும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில், தொழில் முனைவோர் திவ்யா சின்னகிருஷ்ணன் வாயிலாக முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3.00 இலட்சம் வழங்கப்படுகிறது இதில் ரொக்கமாக ரூ.1.50 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.50 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.
 
மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியம் ரூ.2.00 இலட்சம் வழங்கபடுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1.00 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குனிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.00 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கபடுகிறது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கிடும் விதமாக இன்றைய தினம் திறந்து வைத்துள்ள முதல்வர் மருந்தகத்தின் மூலம் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகள் வாங்கி பயன்பெற வேண்டும் என  அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் அதை யாராலும் அசைக்க முடியாது மும்மொழி கொள்கையை தமிழகத்தில் புகுத்த முடியாது ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதல்வரே தெரிவித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget