மேலும் அறிய

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்க இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 

கடந்து வந்த பாதை:

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

வழக்கின் தீர்ப்பு விவரம் :
 
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
 
மேல்முறையிடு வழக்கு 

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இவ்வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய இயலாது இவ்வழக்கினை விழுப்புரம் நீதமன்றம் ஜனவரி 24  ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிமென செயன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
IOB Recruitment for LBO: உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
Ajith Race Car Accident: ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
Covid Spread in TN: மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
IOB Recruitment for LBO: உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
Ajith Race Car Accident: ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
Covid Spread in TN: மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
Spy Jyoti Malhotra Arrest: இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
இப்படி பண்ணிட்டியியே மா.!! பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது, யார் அவர்?
ஆளுநர் விவகாரத்தில் ஸ்டாலின் அடுத்த அதிரடி.. 8 மாநில முதல்வர்களுக்கு பறந்த கடிதம்
ஆளுநர் விவகாரத்தில் ஸ்டாலின் அடுத்த அதிரடி.. 8 மாநில முதல்வர்களுக்கு பறந்த கடிதம்
சார்மினாரில் பயங்கர தீ விபத்து.. உருக்கமாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
சார்மினாரில் பயங்கர தீ விபத்து.. உருக்கமாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Embed widget