![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் - விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்
தமிழக அரசையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.
![முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் - விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர் CV Shanmugam appeared in Villupuram court omplaint about defamation of Chief Minister - TNN முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் - விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/f1ad176bbc143bd425dfa251059195dc1704352006529113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சிவி சண்முகம் இன்று ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைடுத்த நாட்டார் மங்கலத்தில், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கில் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டதில் நான்கு முறை ஆஜராகி இருந்தார். இந்நிலையில் ஐந்தாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். அதனைதொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி பூர்ணிமா வழக்கு விசரானை 18.01.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதே போன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை தரக்குறைவாக சி.வி. சண்முகம் பேசியதாக காவல் துறை சார்பில் போடப்பட்ட வழக்கிலும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் இன்று ஆஜராகினார். அப்போது மாநிலங்களவை சி.வி. சண்முகம் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை வழங்குமாறு கேட்டு கொண்டத்தின் பேரில் 30 பக்க குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. மீண்டும் இவ்வழக்கு விசாரனையை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)