மேலும் அறிய

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் கடலூர் ஆட்சியர் அறிவிப்பு...!

’’பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’

தீபாவளி பண்டிகை வருகிற 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் வெடிகள் வெடிக்க சில நிபந்தனைகள் மற்றும் தடைகளை மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அதன்படி, பண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இதனால் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பிற அப்பாவி குடிமக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
 

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் கடலூர் ஆட்சியர் அறிவிப்பு...!
 
மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான உரிமையை மீறுவதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது. பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்துவதும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் வெடிபொருட்களை உரிமம் இன்றி விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது. உரிமம் வழங்கப்பட்ட அளவுக்கு மிகாமல் வெடிபொருட்களை இருப்பு வைக்க வேண்டும். தயார் செய்யப்பட்ட வெடிபொருட்களை அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
 
பட்டாசுகளை வைக்க உரிமம் பெற்ற இடங்களில் மின்வயர்கள் மற்றும் மின் இணைப்புகள் வெளியில் தொங்காமலும், பழுதின்றியும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும் தீயணைப்புத் துறையால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய நிலையில் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெடி பொருட்கள் வைத்திருக்கும் இடங்களின் அருகில் எரிவாயு சிலிண்டர்கள் சேகரித்து வைத்தல், தீவிபத்து ஏற்படுத்தக் கூடிய காரணிகள் ஏதும் அருகில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், கட்டாயம் புகைபிடிக்கக் கூடாது.
 
மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படவேண்டிய இடங்களின் அருகில் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், இந்நிலை தொடர பொதுமக்கள் பண்டிகையை முன்னிட்டு கடைகள், கோவில்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதுடன், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.  மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த ஆண்டுகளை போலவே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்கலாம். பாதுகாப்பான சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் நமது அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது பொதுமக்களாகிய நம் அனைவரின் கடமையாகும். ஆகவே அரசின் உத்தரவுகளை கடைபிடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.