மேலும் அறிய

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் கடலூர் ஆட்சியர் அறிவிப்பு...!

’’பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’

தீபாவளி பண்டிகை வருகிற 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் வெடிகள் வெடிக்க சில நிபந்தனைகள் மற்றும் தடைகளை மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அதன்படி, பண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இதனால் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பிற அப்பாவி குடிமக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
 

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் கடலூர் ஆட்சியர் அறிவிப்பு...!
 
மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான உரிமையை மீறுவதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது. பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்துவதும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் வெடிபொருட்களை உரிமம் இன்றி விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது. உரிமம் வழங்கப்பட்ட அளவுக்கு மிகாமல் வெடிபொருட்களை இருப்பு வைக்க வேண்டும். தயார் செய்யப்பட்ட வெடிபொருட்களை அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
 
பட்டாசுகளை வைக்க உரிமம் பெற்ற இடங்களில் மின்வயர்கள் மற்றும் மின் இணைப்புகள் வெளியில் தொங்காமலும், பழுதின்றியும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும் தீயணைப்புத் துறையால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய நிலையில் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெடி பொருட்கள் வைத்திருக்கும் இடங்களின் அருகில் எரிவாயு சிலிண்டர்கள் சேகரித்து வைத்தல், தீவிபத்து ஏற்படுத்தக் கூடிய காரணிகள் ஏதும் அருகில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், கட்டாயம் புகைபிடிக்கக் கூடாது.
 
மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படவேண்டிய இடங்களின் அருகில் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், இந்நிலை தொடர பொதுமக்கள் பண்டிகையை முன்னிட்டு கடைகள், கோவில்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதுடன், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.  மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த ஆண்டுகளை போலவே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்கலாம். பாதுகாப்பான சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் நமது அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது பொதுமக்களாகிய நம் அனைவரின் கடமையாகும். ஆகவே அரசின் உத்தரவுகளை கடைபிடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget