மேலும் அறிய

திட்டக்குடி அருகே 6 கிராம தரைபாலம் முழ்கியது - தனிதீவான 25க்கு மேற்பபட்ட கிராமங்கள்

’’வெல்லிங்டன் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவை எட்டி உள்ளது, இதன் காரணமாக கடைக்கால் வழியாக இன்று காலை 9 மணி நிலவரப்படி 1,700 கன அடி வினாடிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது’’

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின மேலும் தொடர்ந்து நிரம்பி கொண்டே வருகிறது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
 

திட்டக்குடி அருகே 6 கிராம தரைபாலம் முழ்கியது - தனிதீவான 25க்கு மேற்பபட்ட கிராமங்கள்
 
இது தவிர கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணை ஆறு, மணிமுத்தா ஆறு என ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆற்றில் வரும் தண்ணீரின் அளவானது குறைந்து காணப்பட்டது. பின்னர் தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மீண்டும் தாண்ணீர் வரத்து சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.

திட்டக்குடி அருகே 6 கிராம தரைபாலம் முழ்கியது - தனிதீவான 25க்கு மேற்பபட்ட கிராமங்கள்
 
இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து உள்ள வெல்லிங்டன் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவை எட்டி உள்ளது, இதன் காரணமாக கடைக்கால் வழியாக இன்று காலை 9 மணி நிலவரப்படி 1,700 கன அடி வினாடிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. வெல்லிங்டன் அருகே உள்ள ஓடை பகுதிகளில் உள்ள புலிவலம், பெருமூளை, சிறுமூளை, புதுக்குளம் நாவலூர், நிதிநத்தம், ஆகிய 6 கிராமங்களில் உள்ள 6 தரைபாலங்கள் முழ்கி அதன்மீது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் ஆற்று பகுதியை சுற்றி உள்ள 6 கிராம மக்கள் திட்டக்குடி பகுதிக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். முதியவர்கள் குழந்தைகளை தண்ணீரை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகியோர் அறிவுறுத்தி உள்ளது.  

திட்டக்குடி அருகே 6 கிராம தரைபாலம் முழ்கியது - தனிதீவான 25க்கு மேற்பபட்ட கிராமங்கள்
 
நேற்றே தண்ணீர் வருதை அதிகாரிகள் யாரும் தெரிவிக்காத காரணத்தினால் திடீரென்று இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 25 க்கும் மேற்பபட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தனி தீவில் இருப்பது போல் இருகிறார்கள். இந்த சூழலில் நகர்ப்புறங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் தங்களுக்கு போதிய அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் இப்பகுதிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget