மேலும் அறிய

செஞ்சி பகுதியில் தீடீர் ஆய்வு செய்த கலெக்டர் பழனி... அதிகாரிகள் விரைந்து செயல்பட அறிவுறுத்தல்

விழுப்புரம் : செஞ்சி பகுதியில் தீடீர் ஆய்வு செய்த கலெக்டர் பழனி அதிகாரிகள் விரைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டம்பட்டு மற்றும் அணையேரி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி, நேரில் தீடீர் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஒட்டம்பட்டு ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, நாள்தோறும் சிகிச்சை பெற வரும் புறநோயாளிகளின் சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்ததுடன்,பிரசவகால கண்காணிப்பு பிரிவு, மருந்தகம் இருப்பறை, உள்நோயாளிகள் பிரிவு, யுனானி பிரிவு, ஆய்வகம் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பரிசோதனை பிரிவு ஆகியவற்றினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், யானைக்கால் வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு பக்கெட், நாற்காலி மற்றும் துண்டு ஆகியன வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 15-வது ஊராட்சி ஒன்றிய நிதித்திட்டத்தின்கீழ், ரூ.82,000ஃ- மதிப்பீட்டில் சமையலறைக்கூடம் சீரமைக்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கான கழிவறை மற்றும் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான கழிவறை கட்டப்பட்டு வருகிறது. தரமான முறையில் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாடி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அணையேரி ஊராட்சியில், 15-வது ஊராட்சி நிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மேலும், இவ்வூராட்சியில் தற்பொழுதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கு 40 பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதி மக்கள் சாலை வசதி, சிமெண்ட் சாலை, மதகு சீரமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டி வழங்கிய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு துறை சார்ந்த அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு, விரைந்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. அணையேரி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கட்டிடத்தினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே பகுதியில், முள்ளுர் - புதூர் ஏரியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.11.97 இலட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைப்பு மற்றும் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு, மழைநீரினை அதிகளவில் சேமித்திடும் வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அணையேரி ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையினை பார்வையிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் மட்டும் எடை அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, உணவருந்திக் கொண்டிருந்த குழந்தைகளிடம் முட்டை வழங்கப்பட்டதா எனக் கேட்டறிந்ததுடன், அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையினை உடனடியாக சீரமைத்திடவும். பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என மொத்தம் ஒட்டம்பட்டு மற்றும் அணையேரி ஆகிய ஊராட்சிகளில் ரூ.64.71 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வளர்ச்சித் திட்டப்பணிகள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் தேங்காத வண்ணம் ஒவ்வொரு தனி வீட்டிற்கும் உறிஞ்சு குழி ஒன்று அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget