மேலும் அறிய

அமமுக பிரமுகர் ஏமாற்றியதாக இளம்பெண் தற்கொலை - உடலுடன் உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு

விழுப்புரம் அருகே இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அமமுக பிரமுகரை கைது செய்யகோரி மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் அமமுக பேரூராட்சி உறுப்பினர் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை நெருக்கமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் இளம்பெண் மனமுடைந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி இறந்த பெண்ணின் உடலை வைத்து கொண்டு விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சுந்தரிபாளையம் கிராமத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகள் முத்துலட்சுமி. இவரை, அதே பகுதியை சார்ந்த அமமுக நிர்வாகியும் வளவனூர் பேரூராட்சியின் 11 வது வார்டு உறுப்பினரான கந்தன் என்பவர் கோலியனூரில் வாடகை பாத்திர கடையில் கணக்கு வழக்கு பார்ப்பதற்காக  பணிக்கு சேர்த்து வைத்துள்ளனர். இங்கு பணி செய்த முத்துலட்சுமியிடம் கந்தன் ஆசை வார்த்தை கூறி பலமுறை நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே முத்துலட்சுமியை  கண்டித்து பணி செல்வதை நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சென்னைக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நர்சிங் படிக்க வைக்க அனுப்பியுள்ளனர்.

சென்னையில் நர்சிங் படித்து கொண்டிருந்த முத்துலெட்சுமியிடம் இரண்டு மாதங்களுக்கு முன் கந்தன் போனில் தொடர்பு கொண்டு, ’நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என பேசி அடிக்கடி சினிமா தியேட்டர், ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமடையவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கந்தனிடம் கேட்டுள்ளார். அதற்கு கந்தன் மறுப்பு தெரிவிக்கவே கடந்த 28 ஆம் தேதி முத்துலெட்சுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே இளம்பெண்ணின் உறவினர்கள் கந்தன் மீது நடவடிக்கை எடுக்ககோரி முத்துலெட்சுமியின் உடலை வளவனூர் நான்கு முனை சந்திப்பில் வைத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே போலீசார் மறியலை கைவிட்டு செல்லுமாறு வலியுறுத்தினார். இருப்பினும் மறியலை கைவிடாததால் விழுப்புரம் எஸ்.பி சசாங் சாய் நேரில் வந்து உடலுடன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர்.

சாலை மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இச்சம்பவம் தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண்னை ஏமாற்றிய கந்தனுக்கு முத்துலெட்சுமி இறந்த செய்தி தெரியவரவே கந்தன் விஷம் அருந்துவிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கந்தன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.