மேலும் அறிய

ABP Nadu Impact: கடந்த ஆண்டு உடைந்த ஏரி மதகு... மீண்டும் சீரமைப்பு செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மழையில் உடைந்த ஏரி மதகு ABP நாடு செய்தி வெளியிட்ட பின் தற்போது புதிதாக மதகு சீரமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மழையின் போது எரி உடைப்பு ஏற்பட்டு மழை நீர் முழுவதும் வீணாக கடலில் கலந்தது, பின்னர் தற்காலிகமாக மணல் கொட்டி சரிசெய்தனர். ஆனால் அதற்கான நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை, ஏரியின் மதகு உடைந்து இருப்பதால் மீண்டும் மழை வந்தால் மழை நீரை சேமிக்க முடியாது, வீடுகளுக்குள் மழை நீர் புகும் ஆபாயம் ஏற்பட்ட நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் மதகு பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது, இந்த நிலையில் தற்போது பணி நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வயல் வெளிகளில் வெள்ள நீர் புகுந்தது.

கந்தாடு ஊராட்சியில் 13 சிறு கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இதற்கு நீர் ஆதாரமாக கந்தாடு கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 5 ஆண்டுகளாக ஏரியின் கலங்கல் சேதமடைந்து ஏரியின் நீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. ஏரி பாசனமின்றி விவசாயிகள் 200 அடி ஆழம் போர்வெல் மூலம் தண்ணீரை எடுத்து விவசாயம் செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

ஏரி மதகு உடஞ்ஏரி மதகு உடஞ்சி போச்சு... விவசாயம் கூட பண்ணமுடியல... திரும்பவும் ஊருக்குள்ள தண்ணி வரும் சார்... கண்ணீரில் கந்தாடு மக்கள்சி போச்சு... விவசாயம் கூட பண்ணமுடியல... திரும்பவும் ஊருக்குள்ள தண்ணி வரும் சார்... கண்ணீரில் கந்தாடு மக்கள்

கடந்த ஆண்டு ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. கந்தாடு பகுதியில் உள்ள ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள காணிமேடு, கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியாரும் நிலைவந்தது. இந்த நிலையில் மழை நின்றவுடன் தற்காலிகமாக மணலை கொட்டி சரி செய்தனர்.

பின்னர், மதகு சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இதனால், வரும் மழைகாலத்தில் ஏரியில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளதால் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் கவலையில் இருந்தனர். மேலும் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து விடும் என்ற அச்சத்தில் இருந்த நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் மதகு பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது, இந்த நிலையில் தற்போது பணி நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழை நீர் சேமிக்க முடியும் என விவசயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: மணிக்கு 45 கி.மீ வேகம்; சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
TN Rain News LIVE: மணிக்கு 45 கி.மீ வேகம்; சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: மணிக்கு 45 கி.மீ வேகம்; சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
TN Rain News LIVE: மணிக்கு 45 கி.மீ வேகம்; சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
Samsung protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chennai Rains: மிரட்டும் மழை! சென்னையில் 58 இடங்களில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - எந்தெந்த ஏரியா?
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
Schools Colleges Holiday: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை; எங்கெல்லாம்?
சென்னை மழை; உணவு, தங்குமிடத்துக்கு தயார் நிலையில் தேமுதிக அலுவலகம் - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
சென்னை மழை; உணவு, தங்குமிடத்துக்கு தயார் நிலையில் தேமுதிக அலுவலகம் - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
Chennai Rains: விடாது விரட்டும் மழை! சென்னையில் கொட்டித் தீர்த்த 20 செ.மீட்டர் மழை - எந்த ஏரியாவில்?
Chennai Rains: விடாது விரட்டும் மழை! சென்னையில் கொட்டித் தீர்த்த 20 செ.மீட்டர் மழை - எந்த ஏரியாவில்?
Assembly Election 2024 Date: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
Assembly Election 2024 Date: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
Embed widget