மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திட்டக்குடி அருகே அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர், 91 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்..
மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகள் மீது அரசு பேருந்து மோதியதில் ஆட்டின் உரிமையாளர் பலி. அவருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
![திட்டக்குடி அருகே அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர், 91 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்.. 91 goats lost their lives when a government bus collided near Cuddalore TNN திட்டக்குடி அருகே அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர், 91 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/28/672386d68cb22cfbbb8efecfab6b6d4e1672235525623572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடலூர் விபத்தில் இறந்தவர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் என்பவர் இவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை, பகுதியில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்பொழுது லட்சுமணன் தனது இருசக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்துள்ளார் வேப்பூர் நோக்கி வரும் போது சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த செங்கல்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்ற போது ஆடுகள் மீது மோதியது . இதில் 90க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் உடல் சிதறி உயிரிழந்தது.
![திட்டக்குடி அருகே அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர், 91 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/28/f795ed9bbc39b235ea78f17e61628f9f1672235542563572_original.jpg)
ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த லட்சுமணன் மீதும் மோதி அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். அரசு பேருந்து பின்னால் வந்த அதே பணிமணையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெறிசாலனது போலீசார் அரை மணிநேரத்திற்கு மேலாக போராடி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
கடலூர் மத்திய சிறையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். மேலும் இது குறித்து கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50க்கும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிரடியாக உள்ளே சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை தீவிர செய்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடைபெற்றது.
மேலும் இந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் உள்ளதா என நடைபெற்றது. 2:30 மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்படவில்லை. இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion