மேலும் அறிய

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

TN Assembly: 2025ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாக படிப்பாரா? வெளிநடப்பு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TN Assembly:  தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 

நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்:

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். தலைமைச் செயலகத்திற்கு காலை 9.20 மணிக்கு வருகை தரும் அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

ஆளுநர் உரை நிகழ்த்த வருகை தரும் அவரை பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டசபை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து அளித்து வரவேற்க உள்ளனர். இதன்பின்னர், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. 

என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?

ஆளுநர் உரை 45 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையை 45 நிமிடங்கள் வாசிக்க உள்ளார். அவர் வாசித்து முடித்த பிறகு ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் சட்டமன்றத்தில் வாசிப்பார். 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபகாலமாக பெரியளவில் மோதல் போக்கு இல்லாவிட்டாலும், கடந்த கால ஆளுநர் உரையின்போது ஆளுநர் உரையை புறக்கணித்து ஆர்.என்.ரவி பாதியிலே சென்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி முழு உரையையும் வாசிப்பாரா? அல்லது அரசின் உரையில் ஏதேனும் விடுவித்து வாசிப்பாரா? அல்லது கடந்த காலங்களைப் போல சட்டமன்றத்தில் இருந்து பாதியிலே வெளிநடப்பு செய்வாரா? என்ற பல எதிர்பார்ப்புகளும், கேள்விகளும் எழுந்துள்ளது. 

அனல் பறக்கப்போகும் சட்டமன்றம்:

இன்று ஆளுநர் உரை முடிந்த பிறகு நாளை அவை மீண்டும் கூடுகிறது. சமீபத்தில் காலமான  ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். 

அதற்கு அடுத்த நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று அவை முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும்? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தலைப்பு செய்திகள்

Kanyakumari power cut: கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget