மேலும் அறிய

ஆனந்தத் தாண்டவம் ஆடும் 800 ஆண்டு சோழர் கலை: விழுப்புரம் அருகே மிக அரிதான சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையம்பட்டு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர் சிற்பம்.

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது,  800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சோழர் கால அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ளது வளையம்பட்டு கிராமம். இங்கு பழமைவாய்ந்த சிற்பம் காணப்படுவதாக இப்பகுதியைச் சேர்ந்த பா.சரத்குமார் தகவல் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன்  மழையம்பட்டு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டார்.அப்போது 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய நடராஜர், நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன. 

இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

வளையம்பட்டு கிராமத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விளைநிலம் உள்ளது. இங்கிருக்கும் அரச மரத்தடியில் சுமார் 5 அடி உயரம் உள்ள பலகைக் கல்லில் நடராஜர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் இவர் காட்சி அளிக்கிறார். முன் வலது கரம் அபய முத்திரையிலும் இடது கரம் தூக்கிய கால் விரல்களைச் சுட்டிக்காட்டி கஜ ஹஸ்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளன.

பின் வலது கரம் உடுக்கையை ஏந்தியுள்ளது. இடது கரத்தில் இருப்பதை மரம் மறைத்திருப்பதால் தெளிவாகத் தெரியவில்லை. வலது கால் கீழே ஊன்றியிருக்க இடது காலைத் தூக்கி ஆனந்த நடனமாடுகிறார் சிவபெருமான். 
புன்னகை பூக்கும் அழகிய முகத்துடனும் அணிகலன்கள் அழகாகத் தெரியும்படி மிகுந்த நுட்பமும் கலைநயத்துடனும் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்புத் திருமேனிகளில் காணப்படும் திருவாசி எனும் அமைப்பு இந்த சிற்பத்திலும் காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். இப்பகுதியில் இருந்த சிவாலயத்தில் இவர் மூலவராக வைத்து வணங்கப்பட்டிருக்க வேண்டும்.  பொதுவாக சிவபெருமான் நடனமாடும் திருக்கோலம் செப்புத் திருமேனிகளில்தான் கிடைத்துள்ளன. பலகைக் கல் சிற்பம் என்பது மிகவும் அரிதானதாகும். இதனால் மழையம்பட்டு நடராஜர் சிற்பம் அரிதானதாகக் கருதப்படுகிறது.‌  இந்த சிற்பம் சோழர் காலத்தைச் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

நடராஜர் சிற்பத்துக்கு எதிரிலேயே சில அடி தூரத்தில் மிகப்பெரிய திமிலுடன் கூடிய நந்தி காணப்படுகிறது. கலைநயம் மிக்க மணிகள் இதன் கழுத்தை அலங்கரிக்கின்றன. சோழர் கால சிற்பக் கலைக்குச் சான்றாக நந்தி அமைந்துள்ளது. இதே பகுதியில் சப்தமாதர் குழுவைச் சேர்ந்த 4 சிற்பங்களும் காணப்படுகின்றன. 

வளையம்பட்டு கிராமத்தில் செங்கல்லால் ஆன சிவாலயம் இருந்து காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். தற்போது அதன் ஓரிரு தடயங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் பழமைவாய்ந்த தடயங்கள் கிடைக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஏமப்பேரூர் பிரகதீஸ்வரன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget