மேலும் அறிய

கடலூரில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த5 பேர் உயிரிழப்பு.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் என்ற இடத்தில் பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுள்ளது. இதை பார்க்காமல் வந்த லாரி தனியார் பேருந்தில் மோதியது, அதனைத் தொடர்ந்து வந்த கார் நிறுத்திய நிலையில் காரை பின்தொடர்ந்து வந்த லாரி மோதியதில் இரண்டு லாரிகளுக்கும் நடுவில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியது.
 
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இச்சம்பவம் அறிந்து வேப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய வாகனத்தை சுமார் ஒன்றரை நேரத்திற்கு பிறகு மீட்டனர். இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
 
தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த ஐந்து பேர் உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார்.
 
இந்த விசாரணையில் மதுரை மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன், மனைவி வட்சலா இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள் தனது குடும்பத்தோடு கேரளாவில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டதும் இந்த விபத்தில் விஜயராகவன் வட்சலா, வட்சலாவின் தாயார் வசந்த் லட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
 

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு-ஐந்து பேர் காயம் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு.
 

கடலூரில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத் உதவியாளரின் மாமனார், மாமியார் மீது அமைச்சரின் தூண்டுதலின்பேரில் கொடூர தாக்குதல் நடத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பத், அவரது சகோதர்ர் உட்பட 10 -க்கு மேற்பபட்டோர் மீது வழக்கு பதிவு
 
முன்னாள் அதிமுக தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் குமாரமங்கலத்தில் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் அவரிடம் கடந்த ஆட்சியில் நேர்முக உதவியாளராக இருந்தார்.ஆட்சி மாற்றத்திற்க்கு பிறகு அவரிடமிருந்து விலகி உள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் எம். சி சம்பத்தின் சகோதரர் தங்கமணி என்பவருக்கும் குமாருக்கும் இடையே  சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
 
அதே கிராமத்தில் வசித்து வந்த அவரது மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி மீது முன்னாள் அமைச்சரின் அண்ணன் தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் காயமடைந்த ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் எம் சி சம்பத் அவர்களின் தூண்டுதலின்பேரில் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார்.
 
புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அவரது அண்ணன் எம்.சி.தங்கமணி, அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரன்,பழனி உள்ளிட்ட 10 க்கு மேற்பபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
 
முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தரப்பினர் இதற்கு மறுப்பு தெரிவித்தும், அரசியல் காரணங்களுக்காக தன் மீது புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் தாக்குதல் நடத்தி ஐந்து பேர் மருத்துவமனையில் உள்ள நிகழ்வும் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget