மேலும் அறிய

கடலூரில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த5 பேர் உயிரிழப்பு.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் என்ற இடத்தில் பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுள்ளது. இதை பார்க்காமல் வந்த லாரி தனியார் பேருந்தில் மோதியது, அதனைத் தொடர்ந்து வந்த கார் நிறுத்திய நிலையில் காரை பின்தொடர்ந்து வந்த லாரி மோதியதில் இரண்டு லாரிகளுக்கும் நடுவில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியது.
 
இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இச்சம்பவம் அறிந்து வேப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய வாகனத்தை சுமார் ஒன்றரை நேரத்திற்கு பிறகு மீட்டனர். இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
 
தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த ஐந்து பேர் உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார்.
 
இந்த விசாரணையில் மதுரை மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன், மனைவி வட்சலா இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள் தனது குடும்பத்தோடு கேரளாவில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டதும் இந்த விபத்தில் விஜயராகவன் வட்சலா, வட்சலாவின் தாயார் வசந்த் லட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
 

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு-ஐந்து பேர் காயம் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு.
 

கடலூரில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5  பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத் உதவியாளரின் மாமனார், மாமியார் மீது அமைச்சரின் தூண்டுதலின்பேரில் கொடூர தாக்குதல் நடத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பத், அவரது சகோதர்ர் உட்பட 10 -க்கு மேற்பபட்டோர் மீது வழக்கு பதிவு
 
முன்னாள் அதிமுக தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் குமாரமங்கலத்தில் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் அவரிடம் கடந்த ஆட்சியில் நேர்முக உதவியாளராக இருந்தார்.ஆட்சி மாற்றத்திற்க்கு பிறகு அவரிடமிருந்து விலகி உள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் எம். சி சம்பத்தின் சகோதரர் தங்கமணி என்பவருக்கும் குமாருக்கும் இடையே  சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
 
அதே கிராமத்தில் வசித்து வந்த அவரது மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி மீது முன்னாள் அமைச்சரின் அண்ணன் தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் காயமடைந்த ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் எம் சி சம்பத் அவர்களின் தூண்டுதலின்பேரில் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார்.
 
புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அவரது அண்ணன் எம்.சி.தங்கமணி, அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரன்,பழனி உள்ளிட்ட 10 க்கு மேற்பபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
 
முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தரப்பினர் இதற்கு மறுப்பு தெரிவித்தும், அரசியல் காரணங்களுக்காக தன் மீது புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் தாக்குதல் நடத்தி ஐந்து பேர் மருத்துவமனையில் உள்ள நிகழ்வும் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget