மேலும் அறிய

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வருத்தம்’... அமைச்சர் சேகர் பாபு முன் அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி!

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, காலணிகளுடன் கோயிலுக்குள் நுழைந்த கட்சியினர் என குளறுபடிகள் தொடர்ந்தன

இந்துசமய அறநிலையத்துறை விழாவில் இஸ்லாமிய பெண் கலந்துகொண்டுள்ளாரே இதுவே திராவிட மாடல் என்றும், அடுத்த மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அரசு விழாவான இந்நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இறை வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 

இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “அறநிலையத்துறை அரசு நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும் அதை பற்றி கவலையில்லை. ஆனால், அறநிலைத்துறையும் அரசு துறைதான், அது சார்ந்த நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சிதான், இதனால்தான் இங்குள்ள விளம்பர பதாகையில் கோபுரத்துடன் கூடிய அரசு சின்னம் போடப்பட்டுள்ளது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும். இன்று அது பாடாதது வருத்தம். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். வரும் நாட்களில் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இங்கே பொறுப்பேற்றவர்கள் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது சரியான ஆட்களை நியமிக்க வேண்டும். குடிகாரன், கோயில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது அப்படி போட்டால் உங்களை பதவியில் இருந்து எடுத்துவிடுவோம்.

என் சாதிக்காரனை போடு, உன் சாதிக்காரனை போடு என இருந்தால் நாசமாக போய்விடும். இங்குள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சிறிய இடத்தை பேருந்து நிலையத்துக்கு கொடுத்தால் மேலும் பேருந்து நிலையம் நவீனமயமாக்க உதவும்” என்றார். 

முன்னதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “திமுக இந்துவிரோத கட்சி, எதிரிக்கட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் பங்கேற்றுள்ளாரே, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுவரை 3 மாவட்டத்துக்கு அறநிலைய துறை அறங்காவலர்களை நியமித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் 12 மாவட்டங்களுக்கு நியமித்துவிடுவோம். அடுத்த மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும்  இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த வேலூர் அறங்காவலர் குழு தமிழகத்திலேயே சிறந்த அறநிலையத்துறை அறங்காவலர் குழு என்ற பெயர் எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சி செல்லியம்மன் கோயிலினுள் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த கட்சியினர் சிலர் காலணிகளை அணிந்தவாறு கோயிலுக்குள் வந்ததால் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் விழா தொடக்கத்தில் குத்து விளக்கு ஏற்றாதது, முறையாக திட்டமிடாதது, தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு போன்றவற்றால் சிறிது நேரம் அதிருப்தியுடன் சலசலப்பு நிலவியது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget