Vellore Power Cut (6-12-2025): வேலூரில் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை: கரண்ட் எப்போ வரும்? - முழு விவரம் இதோ
Vellore Power Cut (6-12-2025): வேலூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 06, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
மேல்பாடி
மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள்.
கீரைசாத்து
பொன்னை புதூர், எஸ்.என். பாளையம், பொன்னை டவுன், கே.என். பாளையம் மற்றும் கீரைசாத்து சுற்றுவட்டார பகுதிகள்.
அரக்கோணம்
அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போர்டு, கடவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர்.
முகுந்தராயபுரம்
நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மேல்வெங்கடபுரம்
கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
அரக்கோணம் விண்டர்பேட்
விண்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், நவல், ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.
மோசூர்
வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.





















