மேலும் அறிய

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.3 கோடியே 67 லட்சத்து 42 ஆயிரத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் 2022 ஆண்டு காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், "வேலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு குற்ற சம்பவங்களை தடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால் குற்றவழக்குகள் குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 275 வழக்குகள் பதிவான நிலையில் கடந்தாண்டு 227 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. சென்ற ஆண்டு மட்டும் 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், ரவுடிகளுக்கு இடையே தகராறு, முன்பகை காரணமாக எந்த கொலையும் கிடையாது. குடும்ப தகராறு, முறையற்ற உறவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான கொலைகள் நடந்துள்ளது.

 


வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு

 

போக்சோ, எஸ்டி எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள்

போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் அதிகரித்துள்ளன. 2021-ம் ஆண்டில் 49 போக்சோ வழக்குகளும், 8 எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளும் பதிவாகி இருந்தன. ஆனால் சென்ற ஆண்டு 66 போக்சோ மற்றும் 24 எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு 114 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதில் 28 பேர் கஞ்சா கடத்திய, விற்ற நபர்கள் ஆவர். 331 கிலோ கஞ்சா பறிமுதல் மாவட்டத்தில் காணாமல் போன 466 நபர்களில் 392 பேரை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து உள்ளோம். மணல் கடத்தல் தொடர்பாக 308 வழக்குகள் பதிந்து 317 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளோம். அவர்கள் பயன்படுத்திய 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 



வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு

 

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை

சாராயம் 44,804 லிட்டர் , 2,08,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. 12,789 கிலோ குட்கா மற்றும் அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 66 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.33 லட்சம் மதிப்பிலான 331 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 27 பேரின் வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளோம். தொடர்ந்து போக்குவரத்து விதியைமீறிய 22,505 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலைக்கிராமங்களில் உரிமம் பெறாமல் பயன்படுத்திய 12 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 



வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு

சைபர் கிரைம் வழக்குகள்

சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.3 கோடியே 67 லட்சத்து 42 ஆயிரத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். அதில், ரூ.70 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் பணத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. லாட்டரி விற்றது தொடர்பாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்டம் தொடர்பாக 63 வழக்குகளில் 193 பேர் கைதாகி உள்ளனர். 2021-ம் ஆண்டு கடன் பிரச்சினை, உடல்நலக்குறைவு, குடும்ப தகராறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 257 பேர் தற்கொலை செய்தனர். கடந்தாண்டு 274 பேர் தற்கொலை செய்துள்ளனர். முகம் காணும் செயலி மூலம் 75 குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget