மேலும் அறிய

அம்மன் சேலையை எரித்து நிர்வாண கோலமாக்கிய மர்ம நபர்கள்; போலீசில் புகார்!

ஒரு வாரம் ஆகியும்  அவர்களது புகார் மீது காவேரிப்பாக்கம் போலீசார்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, இந்து முன்னணியினர் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே  தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்துள்ளது கொண்டாபுரம் கிராமம் . இந்த கிராமத்தில் 100  ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த  காமாட்சி அம்மன் உடனுறை பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது .

பல வருடங்களாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த கோயிலில் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளது  . குறிப்பாக 100 வருடத்திற்கு மேல் பழமையான இந்த கோயிலில் 10 வருடத்திற்கு முன்பாக கோயிலின் மேல்புறத்தில் இருந்த கலச கோபுரங்கள் இரிடியத்திற்காக மர்ம நபர்களால் திருடப்பட்டது .  இது தொடர்பாக காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தும் , 10 வருடங்கள் கடந்தும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை . அதன் பின்னரே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த கோயிலை , இந்து அறநிலைத் துறையினர் மீட்டு அவர்களது கட்டுப்பாட்டில் பராமரித்து வருகின்றனர் .


அம்மன் சேலையை எரித்து நிர்வாண கோலமாக்கிய மர்ம நபர்கள்; போலீசில் புகார்!

இந்நிலையில் சென்ற வாரம் , 16 ஆம் தேதி கோயிலிலுள்ள அம்மன் சிலை மேல் உடுத்தியிருந்த  சேலையை மர்ம நபர்கள் அம்மனின் மூலஸ்தானத்திலே தீ வைத்து எரித்துள்ளனர் .

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கொண்டாபுரம் கிராம மக்கள் , இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தாளாது கிராமத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று அஞ்சி , ரகசியமாக அடுத்த நாளே  ( ஜூலை மாதம் 17 ஆம் தேதி ) இந்த சம்பவம் தொடர்பாக  காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக  புகார் கொடுக்காமல்  வாய் வார்த்தையாக ஊர்மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகியும்  அவர்களது புகார் மீது காவேரிப்பாக்கம் போலீசார்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று,  ஹிந்து முன்னணி கட்சியின் காவேரிப்பாக்கம் கோட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஹிந்து முன்னணியினர் மற்றும்   கொண்டாபுரம் ஊர்மக்கள் , ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் , அம்மன் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களிடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர்  .


அம்மன் சேலையை எரித்து நிர்வாண கோலமாக்கிய மர்ம நபர்கள்; போலீசில் புகார்!

புகார் மனுவினை பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, காவேரிப்பாக்கம் போலீசாரை இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் . மேலும் கோவில் நிர்வாகத்திடம் கோயிலை சுற்றி சிசிடிவி கேமரா அமைக்கவும் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படும்  இந்த கோயிலுக்கென்று தனியாக இரவுநேர காவல்காரர் ஒருவரை நியமிக்கவும் , பரிந்துரை செய்தார் .

பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் சிலையை அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் இன்று காட்டுத் தீ போல் மற்ற கிராமங்களுக்கும்  பரவத் தொடங்கியுள்ளது .இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட   கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர் .

தலைப்பு செய்திகள்

CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
Embed widget