மேலும் அறிய

Q-பிரிவு ஆய்வாளர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு..! ஜோலார்பேட்டையில் பரபரப்பு..!

இன்ஸ்பெக்டர் புனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு பைக்கில் மாயமானார். சம்பவம் நடந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் புனிதாவின்  மொபைல்போனில் சார்ஜ் இல்லை என்று கூறப்படுகிறது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன கம்மியம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவர் திருப்பத்தூர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சம்பத் சின்ன கம்மியம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புனிதா, தற்போது பரோலில் வந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏதும்  நடக்கின்றதா என்ற கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.


Q-பிரிவு ஆய்வாளர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு..! ஜோலார்பேட்டையில் பரபரப்பு..!

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ஜோலார்பேட்டையிலுள்ள பேரறிவாளன் வீட்டில் இருந்து பணி முடித்துக்கொண்டு தனது மொபட்டில்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன கம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார் . 

சந்தேகத்துக்கு இடம் வகிக்கும்  வகையில் நின்றுகொண்டிருந்த அந்த அடையாளம் தெரியாத நபரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் புனிதா, அவர் நின்று கொண்டிருந்த பகுதியில் தனது மொபெட்டை நிறுத்தி , அவனிடம்  விசாரணை மேற்கொள்ளலாம் என்று அவரது மொபெட்டை சைடு ஸ்டேண்ட் போட்டுக்கொண்டிருக்கும்பொழுது, சாலையில் நின்று கொண்டிருந்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் புனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அவனது  பைக்கில் மாயமானார். சம்பவம் நடந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் புனிதாவின்  மொபைல் போனில் அந்த சமயத்தில் சார்ஜ் இல்லை என்று கூறப்படுகின்றது , மேலும் இரவு நேரத்தில் அருகில் யாரும்  இல்லாத காரணத்தினால் , செய்வது அறியாமல் தவித்த புனிதா , அவரது மொபெட்டை எங்கும் நிறுத்தாமல் நேராக  சின்ன கம்மியம்பட்டு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அடைந்ததும்  இந்த சம்பவம் குறித்து  ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கொடுத்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் அந்த அடையாளம் தெரியாத கொள்ளையனை தேடி வருகின்றனர். 

தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் .

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சமயத்தில் , ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ளது. இதேபோல் சென்ற வெள்ளிக்கிழமை, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சுஜாதா (வயது 45) மற்றும்  இவருடைய உறவினர் சிவபூஷணம் (வயது 67) ஆகிய இரு பெண்மணிகளிடம் , காரில் லிப்ட் கொடுப்பதுபோல் அவர்களை காரில் ஏற்றிய அடையாளம் தெரியாத நபர், ஓடும் காரில் வைத்தே அவர்களது 10 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு, அவர்களை ஓடும் காரில் இருந்து வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றான். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் , வழக்குப் பதிவுசெய்து , இரண்டு சிறப்புபடை அமைத்து காரில் தப்பிச்சென்ற செயின் பறிப்பு கொள்ளையனை தேடி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget