மேலும் அறிய

ஆரணி ஓட்டலில் காடை வறுவலில் புழுக்கள் - வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணியில் உள்ள அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட காடைவறுவலில் புழுக்கள் நெளிந்ததால் அதனை சாப்பிட வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தியின் மகன் விநாயகம் வயது (35) என்பவர் அசைவ உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். அவர் அசைவ உணவான காடை வறுவல் ஒன்றை ஆர்டர் கொடுத்து அதனை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சர்வர் கொண்டு வந்த காடை வறுவலை சாப்பிட எடுத்தபோது உள்பகுதியில் புழுக்கள் நெளிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுசம்பந்தமாக உடனடியாக விநாயகம் ஊழியர்களிடமும், உரிமையாளரிடமும் கூறியுள்ளார். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருடன் வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓட்டலில் சாப்பிட்ட விநாயகம், காடை வறுவலில் புழுக்கள் நெளிந்ததை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அதற்குண்டான பில்லையும் செலுத்தி விட்டு ஓட்டலில் இருந்து சென்றுள்ளார். பின்னர் விநாயகம் காடையில் புழுக்கள் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து, ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அசைவு ஓட்டலுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அவர் சாப்பிட்டு வைக்கப்பட்டிருந்த காடை வறுவலையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரணி நகரில் தொடர்ந்து அசைவ ஓட்டல்களில் இது போன்ற சுகாதார கேடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ஓட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


ஆரணி ஓட்டலில் காடை வறுவலில் புழுக்கள் -  வாடிக்கையாளர் அதிர்ச்சி

 

இதேபோல் சில மாதத்திற்கு முன்பு ஆரணியில் உள்ள தனியார் 5 ஸ்டார் அசைவ உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல் கடந்த மே மாதம் இந்த அசைவ உணவகத்தில் பள்ளி மாணவர் ஒருவர் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவை சாப்பிட்டு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மாணவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget