மேலும் அறிய

திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே அதி வேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழந்தது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லன்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த பெருமாள் வயது (50). இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். பெருமாள் தன்னுடைய ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவார். இந்நிலையில் பெருமாள் நேற்று தன்னுடைய ஆடுகளை வழக்கம்போல் காலையில் மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்று, மாலையில் வீட்டிற்கு ஓட்டிவந்தார். அப்போது வீட்டிற்கு  திரும்பி கொண்டு இருந்தபொழுது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது சென்னை வடபழனியை சேர்ந்த விஸ்வநாதன் வயது (36) என்பவர் திருவண்ணாமலையில் இருந்து பாண்டிச்சேரியை நோக்கி காரை அதிவேகமாக ஓட்டி வந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய.. 7 மணி செய்திகள்!

 


திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை  மறியல்

அப்போது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது கார் அதிவேகமாக மோதியது, அதில் சில ஆடுகள் சினிமா பட காட்சிகள் போன்று தூக்கி விச்சப்பட்டது. இதனைக் கண்ட பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத்தொடர்ந்து இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆடுகள் மீது காரை  மோதிய நபரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்றும், எங்களுடைய கிராமம் பகுதியில் இது போன்று பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலையில் தான் பள்ளிகள் உள்ளதாகவும், இவ்வழியாக செல்லக்கூடிய கார், பேருந்து, வேன் அனைத்தும் அதிவேகத்தில் செல்கின்றது எங்கள் கிராமத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Watch Video: சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 200 வாகனங்கள்...! என்ன காரணம்...?

 

 


திருவண்ணாமலை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை  மறியல்

மேலும், இப்பகுதி மக்கள் பல்வேறு முறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவண்ணாமலை விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கைகளை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு சாலை மறியலை கிராம மக்கள் கைவிட செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Watch Video: விமானத்தில் பயங்கர சண்டை... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்... என்னதான் நடந்தது..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget