மேலும் அறிய

Tirupattur Inscription: திருப்பத்துார் அருகே 600 ஆண்டுகளுக்கு முந்தைய நிலக்கொடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

இக்கல்வெட்டு பழந்தமிழரின் அளவை முறைகளை அறிந்துகொள்ளவும் இவ்வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் எடுத்துரைக்கும் சிறப்புக்குரிய ஆவணமாகும்.

 

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரிப் பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பத்துார் அருகிலுள்ள பெருமாபட்டு கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில், கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் கல்வெட்டினை கண்டறிந்தனர். 

இதுகுறித்து முனைவர் பிரபு கூறுகையில், "பெருமாப்பட்டு ஏரிக்கரையில் கள ஆய்வினை மேற்கொண்டோம். பெருமாப்பட்டு கிராமத்தில் சந்தப்பன் ஏரியின் மேற்கு பகுதியின் கரையோரம் குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் விவசாய நிலத்தில் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தோம். இக்கல்வெட்டானது 3 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் ஆனதாகும். கல்வெட்டின் மேற்பகுதியில் திருச்சக்கரம் கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளன.

இது வைணவ அடையாளம் அதாவது பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தினை குறிப்பதாகும். பொதுவாக பழங்கால தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்குவது மரபு. அவ்வாறு வழங்கும் கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பர். அவ்வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல கண்டறியப்பட்டுள்ளது.


Tirupattur Inscription: திருப்பத்துார் அருகே 600 ஆண்டுகளுக்கு முந்தைய நிலக்கொடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

நிலக்கொடை  தொடர்புடைய கல்வெட்டுகளை, சூலக்கல், வாமனக்கல், பள்ளிச்சந்தம் என்ற பெயர்களில் அழைக்கப்படும். திருப்பத்துார் வட்டாரத்தில் பழந்தமிழரின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் எண்ணற்ற தடயங்கள் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அவ்வகையில் இக்கல்வெட்டானது ஒரு கோயிலுக்கு நிலக்கொடை அளித்த விபரங்களை சுருக்கமாகப் பதிவு செய்துள்ளனர்.

இதில் குறிப்பிட்டுள்ள ‘கண்டகம்’ என்பது பழந்தமிழர் கையாணட ஒரு முகத்தல் அளவையாகும். அதாவது 4 படி கொண்டது 1 வள்ளம், 40 வள்ளம் கொண்டது 1 கண்டகம் என்பது அளவை முறைகளாகும். எனவே இக்கல்வெட்டில் 40 வள்ளம் கொண்ட விதையினை விதைக்கும் அளவிற்கான நிலத்தினைக் கோயிலுக்கு கொடையாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு விவரிக்கின்றது. 

தோராயமாகக் கணக்கிட்டால், 40 ஏக்கர் நிலத்தினைக் கொடையாக வழங்கியிருக்கக்கூடும். திருப்பத்துார் மாவட்டத்தில் ‘விதைக் கண்டகம்’ என்ற அளவீட்டைக் குறிக்கும் முதல் கல்வெட்டு இதுவேயாகும். கல்வெட்டில் மஞ்சிப்பாடியில் எம்பெருமானுக்கு என்று குறிப்பதால் இப்பகுதியில் ‘மஞ்சிப்பாடி’ என்ற பெயர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேனும் ஒரு ஊருக்கு வழங்கியிருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பைக் கொண்டு இது கி.பி. 14ம் நுாற்றாண்டை சேர்ந்ததென தமிழகத்தின் முதுபெரும் அறிஞர்களான ராஜகோபால் மற்றும் சேகர் உறுதிப்படுத்தினர். 


இக்கல்வெட்டு பழந்தமிழரின் அளவை முறைகளை அறிந்துகொள்ளவும் இவ்வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் எடுத்துரைக்கும் சிறப்புக்குரிய ஆவணமாகும். இது போன்ற வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget